April 21, 2025, 4:25 PM
34.3 C
Chennai

விண்வெளி ஜாலம்! அழகின் கோலம்!

moon
moon

சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) பூமியின் சில அற்புதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளன.

புதிய இன்ஸ்டாகிராம் பதிவில் ஐஎஸ்எஸ் பூமியின் வண்ணங்களின் என நான்கு வெவ்வேறு புகைப்படங்களை பகிரப்பட்டுள்ளது. “நகர விளக்குகள் முதல் சுற்றுப்பாதை சூரிய உதயத்தின் சாயல்கள் வரை” என விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய புகைப்படங்களின் தொகுப்பில் அற்புதமான காட்சிகளை பகிர்ந்துள்ளது.

முதல்படம் இரவில் இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் மற்றும் ரியூனியன் தீவின் பிரகாசமான விளக்குகள் இருண்ட கடல் பகுதிகளோடு எல்லைகளை காண்பிக்கிறது.

இரண்டாவது புகைப்படம் குறித்து பார்க்கையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் டாஸ்மன் கடலில் சூரியனின் பளபளப்பு தன்மையை காட்டுகிறது.

மூன்றாவது புகைப்படம் குறித்து பார்க்கையில் இத்தாலியின் இரவு விளக்குகள் மற்றும் சுற்றுப்பாதையை குறிக்கும் அட்டகாச புகைப்படம், சூரிய உதயத்தின் வசீகரிக்கும் அதிசய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் பகிர்ந்த இந்த புகைப்படத்தை 7.6 மில்லியன் பயனர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் 257000-க்கும் மேற்பட்டோர் இந்த பதிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பயனர் பகிர்ந்த கமெண்ட் குறித்து பார்க்கையில், இது போன்ற புகைப்படங்களை பகிர்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம். அன்றாட பணியில் இருந்து இதுபோன்ற புகைப்படங்கள் பார்ப்பது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  கரூர்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா; விழிப்புணர்வு பிரச்சாரம்!

சமீபத்தில் விண்வெளி நிலையத்தின் மூலம் எடுக்கப்பட்டது. சந்திரன் எந்த நிலையில் இருந்தாலும் விண்வெளியில் அது அற்புதமான பார்வை என சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியன் சுற்றுப்பாதையில் இருந்து சூப்பர் பிங்க் மூன் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன் புகைப்படம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சந்திரன் எந்த விதத்தில் எந்த கட்டத்தில் இருந்தாலும் அது விண்வெளியில் இருந்து அற்புதமான பார்வையை வழங்குகிறது என்று ஐஎஸ்எஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தது.

பில்லியன் கணக்கில் சிறு கற்கள்
விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டும் நாடு அதிகம். பூமியை சுற்றி வரும் “நேச்சுரல் சாட்டிலைட்” அதாவது இயற்கையாக உருவான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் சந்திர கிரகம் ஆனது, பூமிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விட முடியாது.

ALSO READ:  IPL 2025: வெற்றிகரமான தொடக்கத்துடன் பெங்களூர் அணி!

நிலவில் நகரும் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது நாசாவின் லூனார் ரிகான்ஸின்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) ஆகும். இது நிலவை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் நிலவின் சுற்றுப்பாதைக்குள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் என்பதும், இது நிலவின் மேற்பரப்பை மிகவும் விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆய்வு குறித்து பார்க்கையில், பிற நாடுகளைவிட சீனா தாமதமாகவே இந்த தளத்தில் அடியெடுத்து வைத்தது. இருப்பினும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி பிறநாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்தது. இந்த வரிசையில் மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

போட்டிப்போட்டு ஆராய்ச்சி
அமெரிக்காவிற்கு பிறகு நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. நிலவில் நாட்டிய சீன கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்தது. ஒரு வார பயணத்துக்கு பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து நிலவின் மூலக்கூறுகளை கண்டறியவும் நிலவை ஆராய்ச்சி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்., தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories