கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்! : அமைச்சர் பதில் என்ன? தெரியுமா

dmk stalin - 2026

திமுக., எதிர்க்கட்சியாக இருந்த போது, கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போதே, கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இப்போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், திமுக., அரசு அவ்வாறு ஒரு கோடி ரூபாய் வழங்குவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறது.

கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

கொரோனா தோற்றால் இறந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்டசபையில் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி பேசியபோது… கொரோனா தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாட்டால் மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்… என்று பேசினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் 172 இடங்களில் தொற்றை கண்டறியும் ஆய்வு மையங்கள் உள்ளன0 இங்கு மே 21 வரை பரிசோதனை மாதிரிகள் அதிகம் வந்ததால் முடிவுகள் அறிவிப்பு தாமதம் ஆனது உண்மைதான். ஆனால் கடந்த 15 நாட்களாக பரிசோதனை செய்த 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன

தொற்றால் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லாதது. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டும் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. இதை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு இதுவரை 1.29 கோடி தடுப்பூசி பெறப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது தடுப்பூசியை முறையாக செலுத்தியதால், அதைப் பாராட்டி கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.

அரசின் கணக்குப் படி, ஜூன்22ம் தேதி வரையிலான குறிப்பில், 31,580 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஸ்டாலின் பதவி ஏற்ற மே 7ம் தேதி வரை 15,171 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் படி பார்த்தால், இப்போது 32 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப் பட வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலால், தமிழக அரசுக்கு ரூ.32 ஆயிரத்து கோடி சொச்சம் மிச்சமாகியிருக்கிறது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories