22-03-2023 3:38 PM
More
    Homeஅடடே... அப்படியா?கால் போட்டு கால்பாய் ஆஃபர்! சபல ஆண்களுக்கு மோசடி கும்பல் வலை !

    To Read in other Indian Languages…

    கால் போட்டு கால்பாய் ஆஃபர்! சபல ஆண்களுக்கு மோசடி கும்பல் வலை !

    cellphone speech - Dhinasari Tamil

    ஆன்லைன் மூலம் விபச்சாரம்; சபலத்தை பயன்படுத்தி பணமோசடி என இதுபோன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

    பணம் பறிக்கும் கும்பல் இதற்கு முதலீடாக பயன்படுத்துவது நமது சபலத்தைதான். நமது அலைபேசிக்கு ‘ஜாலியாக இருக்கலாம்; ரகசியம் காக்கப்படும். இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்புவர்.

    அதில் தொடர்பு கொண்டால் கொஞ்சும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசி ஆசையை துாண்டி ‘துாண்டில்’ போடுவர்.

    இப்படிதான் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயது குமாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ‘நான் நிஷா. என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் உங்கள் கனவு நிறைவேற்றப்படும்.

    அதுவும் ஜாலியாக. இன்றைய வாழ்க்கையை கொண்டாடுங்கள். ரகசியம் காக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று அடிக்கடி எஸ்.எம்.எஸ்., வந்ததால், அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.

    மறுமுனையில் பேசிய பெண், ‘உங்கள் பெயர் என்ன, எந்த ஊர்’ என்ற விபரங்களை எல்லாம் கேட்டு ஒரு ஆணிடம் அலைபேசியை கொடுத்தார். அந்த நபரும் ‘இது ஒரு நல்ல தொழில். ‘உங்களுக்கு ‘கால் பாய்’ (ஆண் விபச்சாரம்) இருக்க ஆசையா. விருப்பம் இருந்தால் இணையலாம்’ என கேட்க, அதிர்ச்சியடைந்த குமார், ‘எனக்கு விருப்பமில்லை’ என இணைப்பை துண்டித்தார் .

    ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் ‘கால்பாய்’ ஆக இருந்தால் பல சலுகைகள் கிடைக்கும்’ என சபலத்தை துாண்டினார்.

    அப்போதும் குமார் மறுத்துவிட, அடுத்தடுத்து தொந்தரவு வருவதை தடுக்க அந்த எண்ணை தற்போது ‘பிளாக் லிஸ்டில்’ வைத்துவிட்டார்.

    அவர் கூறுகையில், ”என் அலைபேசி எண் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என தெரியவில்லை. இது ஒரு வகையான மோசடி என அறிந்து தொடர்ந்து அவர்களிடம் பேசுவதை தவிர்த்து இணைப்பை துண்டித்துவிட்டேன். அவர்கள் தில்லி, மும்பையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்” என்றார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: இதுபோன்று அழைப்பு வந்தால் போலீசில் புகார் செய்யலாம். சிலர் சபலத்தில் தொடர்ந்து பேசும்போது, ‘உங்கள் போட்டோவை அனுப்புங்கள்.

    ஆடை இல்லாமல் அனுப்புங்கள்’ என நம்மை மூளைச்சலவை செய்கின்றனர். அப்படி கிடைத்த போட்டோவை ‘மார்பிங்’ செய்து பணத்தை பறிப்பார்கள்.

    நமக்கு தெரியாத எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். இதுபோன்று எஸ்.எம்.எஸ்., வந்தால் 155260 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், என்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    9 + eighteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,627FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...