December 6, 2025, 3:29 AM
24.9 C
Chennai

அதிர்ச்சி! வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

susaid
susaid

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 9 வயது சிறுமியின் இறப்புக்குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சுப்பள்ளி கிராமம். இங்குள்ள கோவலன்காடு, நடுவளவு பகுதியைச் சேர்ந்த கணேசனின் மனைவி பிரியா (33), இத்தம்பதிக்கு சாருநிதி (9) என்ற பெண்குழந்தை உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் கணேசன் இறந்து விட்ட நிலையில், பிரியா தனது மகள் சாருநிதியுடன் அப்பகுதியில் வசித்துவந்தார். பிரியா அங்குள்ள பருத்தி அரைவை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை பிரியா வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், சாருநிதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

வேலை முடிந்த மாலையில் பிரியா வீடு திரும்பியபோது, அங்கு சாருநிதி வீட்டில் பிணமாக தூங்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிரியா கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து நிகழ்விடம் வந்த கொங்கணாபுரம் காவல்துறையினர், சாருநிதியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு குறைவான நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலைசெய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணையினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கில் சடலாமாக தொங்கிய நிகழ்வு அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories