பெண்குழந்தைகள் கையில் செல்போன்.. எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!

woman with cell phone
woman with cell phone

சமீபத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு குழந்தைகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்க தொடங்கியது முதல் அவர்கள் ஆன்லைன் செயல்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு இருக்கும் பல ஆபத்துகள் சரியாக புரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அப்படி உங்களுடைய குழந்தைகள் ஆன்லைனில் போலி கணக்குகளிடம் சிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக சமூக வலைதளங்களில் சிலர் போலியாக கணக்குகளை தொடங்கி அதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரை தங்களது வலையில் விழ வைத்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

ஆங்கிலத்தில் இந்த முறைக்கு கேட் ஃபிசிங் என்று கூறப்படும். இந்த வகையான மோசடியில் இருந்து உங்களுடைய குழந்தைகளை பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது:

முதலில் உங்களுடைய குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் நண்பர்களை கவனமாக சேர்க்க அறிவுரை வழங்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு நேரில் தெரியாத நபர்களிடம் இருந்து நண்பர்கள் கோரிக்கை வந்தால் அதை நிராகரிக்க சொல்ல வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் முக்கியமான ஒன்று.

mobile 2
mobile 2

உங்களுடைய குழந்தை ஒருவேளை தங்களுடைய கணக்கில் உள்ள படங்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும். இதற்கு அந்த கணக்கின் தரவு பாதுகாப்பு (பிரைவசி) விருப்பங்களில் பிரைவேட் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பயனில்லாத கணக்கை அழிக்க வேண்டும்:

ஒருவேளை உங்களுடைய குழந்தைகள் முன்பாக ஒரு கணக்கை பயன்படுத்திவிட்டு தற்போது அதை பயன்படுத்தாமல் இருந்தாலும் அதற்கு சில பிரச்னைகள் வரும். அதில் இருக்கும் படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சிலர் போலி கணக்கு தொடங்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பயன்படுத்தாத கணக்குகளை முதலில் அழிக்க வேண்டும்.

உங்களுடைய குழந்தையின் பெயர் அல்லது போட்டோவை பயன்படுத்தி யாராவது போலி கணக்கு தொடங்கியுள்ளனாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி இந்த சோதனையை செய்து அப்படி எதாவது கணக்கு இருந்தால் அதை முடக்கம் செய்ய வேண்டிய முயற்சிகளை எடுங்கள்.

உங்களுடைய குழந்தைகள் சமூக வலைதள கணக்குகள் வைத்திருந்தால் முடிந்தவரை அவர்களுடன் நண்பராக இருங்கள். அத்துடன் அவர்களுடைய சமூக வலைதள நண்பர்கள் பட்டியல் குறித்தும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

ட்விட்டர் தளத்தில் ஒரு கணக்கில் போட்டோ பதிவிடும் பட்சத்தில் அதை யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளும் வகையில் தற்போது இருக்கிறது. அதிலும் உங்களுடைய கணக்கு பாதுகாக்கபட்ட கணக்காக இருந்தால் மட்டுமே படங்களை எடுக்க முடியாது.

ஆனால் அதிலும் நீங்கள் அனுமதிக்கும் ஃபாலோவர்ஸ் படத்தை எடுத்து கொள்ளலாம். ஆகவே ட்விட்டர் தளத்தில் முடிந்தவரை படங்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மேற்கூறப்பட்டுள்ள சில டிப்ஸை உங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் பயன்பாட்டின் போது நீங்கள் நிச்சயம் கடைபிடிப்பது அவசியம். அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுடைய குழந்தைகள் போலி கணக்குகளில் சிக்குவதை தடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories