விரைவில் வர இருக்கும் பறக்கும் கார்!

eVTOL
eVTOL

உலகம் முழுவதும் உள்ள பொதுவான போக்குவரத்து பிரச்சனைகளில் ஒன்று டிராஃபிக் ஜாம். உலகளாவிய இந்த சிக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி நாசா பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மக்களை போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து காப்பாற்ற அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக நாசா நிறுவனம் எலெக்ட்ரிக் வெர்டிகள் டேக்ஆஃப் அன்ட் லேண்டிங் (electric vertical takeoff and landing – eVTOL) ஏர்கிராஃப்ட்டை டெஸ்ட்டிங் செய்து வருகிறது.

புரியும்படி எளிமையாக சொல்வதென்றால் வழக்கமாக தரையில் ஓடும் டாக்ஸிகளை போல, பயணிகளை ஏற்றி கொண்டு வானில் செல்லக்கூடிய ஏர் டாக்ஸிகளை தான் நாசா டெஸ்ட்டிங் செய்ய தொடங்கி உள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் கலிபோர்னியாவின் பிக் சுர் அருகில் அமைந்துள்ள ஜோபிஸ் எலெக்ட்ரிக் பிளைட் பேஸில் (Joby’s Electric Flight Base ) அண்மையில் நடைபெற்றது. இதன் மூலம் பறக்கும் டாக்ஸிகளை ஒரு யதார்த்த நடைமுறையாக மாற்ற நாசா ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது.

நாசாவின் சமீபத்திய செய்தி குறிப்பில்,தங்களது ஏஜென்சியின் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி (ஏஏஎம்) தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கலிபோர்னியாவில் ஜோபி ஏவியேஷனின் eVTOL விமானம் மூலம் சோதனை செய்ய துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படிப்படியான சோதனைகள் மூலம் எதிர்காலத்தில், eVTOL ஏர்கிராஃப்ட் நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏர் டாக்ஸிகளாக சேவை செய்ய முடியும்.

மேலும் இந்த சோதனை முயற்சி பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்கு பொருட்களை கொண்டு செல்ல மற்றொரு போக்குவரத்து முறையை நம்முடன் சேர்க்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள இது மாதிரியான டெஸ்டிங்கின் போது, ஏர்கிராஃப்ட்டிலிருந்து நாசா தொடர்ந்து டேட்டாக்களை சேகரிக்க உள்ளது. இது எதிர்காலத்தில் கமர்ஷியல் பேசஞ்சர் சர்வீஸ்காக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் eVTOL ஏர்கிராஃப்ட் திட்டமிட்ட டெஸ்ட்டிங்கில் பறந்த போது, நாசாவின் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி தேசிய பிரச்சாரக் குழு (NASA’s Advanced Air Mobility National Campaign team ) குறிப்பிட்ட ஏர்கிராஃப்ட் எப்படி நகர்ந்து சென்று பறக்க துவங்கியது, பறக்கும் போது அதிலிருந்து வந்த ஒலி எப்படி இருந்தது, பறந்த சமயத்தில் ஏர்கிராஃப்ட்டானது தரையில் இருந்த கட்டுப்பாட்டாளர்களுடன் எப்படி தொடர்பு கொண்டது என்பது போன்ற பல அடிப்படைகளை கூர்ந்து கவனித்து. இது தொடர்பான டேட்டாக்களை சேகரித்து கொண்டனர்.

இந்த ஏர் டாக்ஸியின் ஒலி தொடர்பான சோதனைக்காக குறைந்தது 50 மைக்ரோஃ போன்கள் அதில் நிறுவப்பட்டிருந்தன. மேலும் eVTOL ஏர்கிராஃப்ட் 90 டிகிரியில் காற்றில் புறப்பட்டு தரையில் தரையிறங்கும்.

இது வரும் 2024-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்டால் சர்வதேச விமானத் துறை மற்றும் போக்குவரத்தில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

இந்த திட்டத்திற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாசா ஆய்வாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது நகரங்களுக்கு இடையே பறக்க போகும் “வெற்றிகரமான பறக்கும் கார்”என்று நாசா கூறி இருக்கிறது.

இந்த திட்டம் முழுவடிவம் பெற்று செயல்பட துவங்கும் போது இதன் அமைப்பில் பேக்கேஜ் டெலிவரி ட்ரோன்கள், ஏர் டாக்ஸிகள் மற்றும் மருத்துவ போக்குவரத்து வாகனங்கள் போன்ற ஏர்கிராஃப்ட்களும் இருக்கலாம் என்று நாசா கூறி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories