நீட் தேர்விற்கு எதிரான பிராச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி.. அரசு பள்ளி மாணவிகள் சாதனை!

neet
neet

நீட்’ தேர்வில் சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், 439 மதிப்பெண்ணும், இன்னொருவர், 410 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

200க்கும் மேற்பட்டவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்., 12ல் நடந்தது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில், சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 710 வரை மதிப்பெண்
பெற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள், இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வி துறையால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரம், அந்தந்த பள்ளிகள் வழியே வெளிவர துவங்கியுள்ளன. இதன்படி திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், நீட் தேர்வை 500 பேர் எழுதியதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ரசிகா என்பவர், 720க்கு, 439 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக கருதப்படுகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி நர்மதா 410 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தவிர, 20 மாணவ, மாணவியர், 300 மதிப்பெண்களுக்கும்
அதிகமாக பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில், நீட் தேர்வுக்கான பயிற்சி, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்டது.

நீட் மாநில ஒருங்கிணைப்பாளர்களான முதன்மை கல்வி அதிகாரி அனிதா, தலைமை ஆசிரியை பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளரான முகப்பேர் கிழக்கு அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையிலான ஆசிரியர்கள், பயிற்சி அளித்துள்ளனர்.

கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ வழியில் தினசரி தேர்வு, ‘ஆன்லைன்’ வழி பயிற்சி, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 439 மதிப்பெண் பெற்றுள்ள ரசிகா என்ற மாணவி, நீட் தேர்வுக்கு முன் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டவர் என்பதும், இவர் தற்போது தான் பிளஸ் 2 முடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான கற்பித்தலும், தேர்வுக்கான பயிற்சியும் அளித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை, மற்ற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories