நீட் தேர்விற்கு எதிரான பிராச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி.. அரசு பள்ளி மாணவிகள் சாதனை!

neet
neet

நீட்’ தேர்வில் சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், 439 மதிப்பெண்ணும், இன்னொருவர், 410 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

200க்கும் மேற்பட்டவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்., 12ல் நடந்தது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில், சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 710 வரை மதிப்பெண்
பெற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள், இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வி துறையால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரம், அந்தந்த பள்ளிகள் வழியே வெளிவர துவங்கியுள்ளன. இதன்படி திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், நீட் தேர்வை 500 பேர் எழுதியதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ரசிகா என்பவர், 720க்கு, 439 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக கருதப்படுகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி நர்மதா 410 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தவிர, 20 மாணவ, மாணவியர், 300 மதிப்பெண்களுக்கும்
அதிகமாக பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில், நீட் தேர்வுக்கான பயிற்சி, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்டது.

நீட் மாநில ஒருங்கிணைப்பாளர்களான முதன்மை கல்வி அதிகாரி அனிதா, தலைமை ஆசிரியை பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளரான முகப்பேர் கிழக்கு அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையிலான ஆசிரியர்கள், பயிற்சி அளித்துள்ளனர்.

கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ வழியில் தினசரி தேர்வு, ‘ஆன்லைன்’ வழி பயிற்சி, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 439 மதிப்பெண் பெற்றுள்ள ரசிகா என்ற மாணவி, நீட் தேர்வுக்கு முன் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டவர் என்பதும், இவர் தற்போது தான் பிளஸ் 2 முடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான கற்பித்தலும், தேர்வுக்கான பயிற்சியும் அளித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை, மற்ற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories