December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

நீட் தேர்விற்கு எதிரான பிராச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி.. அரசு பள்ளி மாணவிகள் சாதனை!

neet
neet

நீட்’ தேர்வில் சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், 439 மதிப்பெண்ணும், இன்னொருவர், 410 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

200க்கும் மேற்பட்டவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்., 12ல் நடந்தது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில், சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 710 வரை மதிப்பெண்
பெற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள், இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வி துறையால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரம், அந்தந்த பள்ளிகள் வழியே வெளிவர துவங்கியுள்ளன. இதன்படி திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், நீட் தேர்வை 500 பேர் எழுதியதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ரசிகா என்பவர், 720க்கு, 439 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக கருதப்படுகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி நர்மதா 410 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தவிர, 20 மாணவ, மாணவியர், 300 மதிப்பெண்களுக்கும்
அதிகமாக பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில், நீட் தேர்வுக்கான பயிற்சி, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்டது.

நீட் மாநில ஒருங்கிணைப்பாளர்களான முதன்மை கல்வி அதிகாரி அனிதா, தலைமை ஆசிரியை பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளரான முகப்பேர் கிழக்கு அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையிலான ஆசிரியர்கள், பயிற்சி அளித்துள்ளனர்.

கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ வழியில் தினசரி தேர்வு, ‘ஆன்லைன்’ வழி பயிற்சி, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 439 மதிப்பெண் பெற்றுள்ள ரசிகா என்ற மாணவி, நீட் தேர்வுக்கு முன் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டவர் என்பதும், இவர் தற்போது தான் பிளஸ் 2 முடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான கற்பித்தலும், தேர்வுக்கான பயிற்சியும் அளித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை, மற்ற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories