December 6, 2025, 1:37 PM
29 C
Chennai

ஒரே சமயத்தில் இத்தனை முட்டை இட்டா நோய் பரவாம என்ன செய்யும்! உஷார் மக்களே!

Mosquito
Mosquito

கொசு முட்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நொடிகளில் கொசு பல முட்டைகளை இடுவதை பார்க்கும்போது வியப்பில் விரியும் விழிகள் இமைக்க மறக்கின்றன.

ஒரு கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும்
கொசுக் கடித்தால் கொடிய நோய் (Mosquitos News) ஏற்படும் அபாயங்களால், பிரச்சனை என்றாலே, கொசுத்தொல்லை என்று சொல்லும் அளவுக்கு கொசுக்கள் மனிதர்களுக்கு பிரம்மாண்ட பிரச்சனையாய் உருவாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரெபேக்கா ஹெர்பர்ட் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வைரலாக்குகின்றனர்.

பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்களுக்கு ரத்தம் முதன்மையான உணவு இல்லை

ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபடும் பெண் கொசு, தனது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே ரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறதாம்!

இதற்காகவே, பெண் கொசுக்கள் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் நீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் (Mosquito video) செய்யகின்றன.

கொசுக்களை நாம் தொடர்ந்து அடித்துக் கொன்றுக் கொண்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை இவ்வளவு வேகமாக எப்படி அதிகரிக்கிறது என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

தற்போது, கொசுக்கள் முட்டையிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல, கொசுக்களின் அதீத அதிகரிப்புக்கு காரணமும் புரியும். கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெண் கொசு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே ஆண் கொசுவுடன் உறவு கொள்கிறதாம். ஒரு நேரத்தில் 200 முதல் 500 முட்டைகள் இடும் பெண் கொசுக்களின் ஆயுளும் அதிகம் தான்.

ஆண் கொசுக்களின் வாழ்நாள் 10 நாட்கள் மட்டுமே என்றால், பெண் கொசுக்களின் ஆயுள் 40 முதல் 50 நாட்கள் ஆகும். கொசுக்கடியால் மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.

“https://t.co/TVxorCe29N”>pic.twitter.com/TVxorCe29N
— Rebecca Herbert (@RebeccaH2030) <a href=”https://twitter.com/RebeccaH2030/status/1440649579142291456?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories