அண்மையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், தென்காசி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வந்திருந்தார். வந்தவர் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ரஜினிக்காக, சிறப்பு பூஜைகள் செய்ததாக சொல்லப்படுகிறது.
அவரின் வருகையை படு ரகசியமாக வைத்திருந்தது ஆலய நிர்வாகம். எந்த செய்தியாளர் மேல என்ன கோபமோ தெரியல… செய்தியாளர்கள் எவருக்கும் தகவல் சொல்லவில்லை.
இந்நிலையில், திடீரென கீழப்பாவூர் பகுதியில் உள்ள நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் செய்தியும் படமும் உலா வந்தது.
நமது ஆலயத்திற்கு இன்று வருகை தந்தார் ஐஸ்வர்யா தனுஷ். ஆனால் இந்தப் படத்தை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்.. என்ற தகவலோடு படம் எல்லா குரூப்க்கும் பரவியது. இதனால் ஆலய நிர்வாகத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
அடிச்சி கேப்பாக அப்பையும் சொல்லாதீக… என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி!

