நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப் போகும் பரிசு..!


modi in madurai - 2026

ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள் திரு. மோடியை பற்றி நேராக குறிப்பிடாது.. நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப்போகும் பரிசு பற்றி….

பழங்கால நியாய சாஸ்த்ரத்தில் குட்டிக்கதை ஒன்று சொல்லப்படும்.

ஒரு மகான் தனது அன்னையிடம்,” நான் தேர்தலில் நிற்கப்போகிறேன்,நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக” என்று அழுத்தம் திருத்தமாக தனது முடிவாக–அபிப்ராயம் கேட்காமல்–கூறியபோது,அவன் அம்மா

அவனிடம்,”வேண்டாம்”என சொல்ல,”ஏன்”என்று மகன் வினவினான்.

அதற்கு அவள் கூறிய காரணங்கள் சிந்திக்க தக்கவை!

”எனக்கு நம்பிக்கை உள்ளது:நீ முனைப்புடையவன் அதனால்நீ தேர்தலில் ஜெயிப்பாய்;நேர்மையாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுநினைப்பாய்.

ஆனால் இவ்வுலகில் அப்படி நேர்மையாக பணி புரிபவர்களை மக்களுக்கே பிடிக்காது.

சரி வேண்டாம்”நல்லது செய்ய வேண்டாம் தீமையே செய்வோம்”..அப்படின்னு நீ நினைத்தால் ஒரு சிலருக்கு உன் மேல் அதனாலேயே வெறுப்பு வரும்.
ஆதலால் நீ நல்லது பண்ணினாலும் தப்பு தீமை செய்தாலும் தப்பு..எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் அதனால் தேதலில் நிற்கவே வேண்டாம்”

என்று logic ஒற்றி அறிவுரை கூறினாள்.

மகனும் logic நியாய சாஸ்த்ரத்தை ஒட்டியே பதில் கூறுகிறான் இவ்வாறு!

“நான் நல்லது செய்தால் கடவுளுக்கு பிடிக்கும்.தீமை செய்தால் மக்களுக்கு பிடிக்கும்.ஆகையால் நன்மை செய்தாலோ தீமை செய்தாலோ யாருக்கோ பிடிக்கத்தானே செய்கிறது.அதனாலயே என் விருப்பப்படி தேர்தல்ல நிற்பது எனக்கு உகந்ததாக படுகிறது”

ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

இப்போ இந்த logic நியாய சாஸ்த்ர வாதத்தை சற்று நீட்டி பார்ப்போம்.

உலகிலே பொறுப்பை ஏற்று கடமையை செய்யும் அரசர்கள் என்று ஒரு ரகமும்..எதையும் அலட்டிக்கொள்ளாமல் எந்த கர்ம வினைகளையும் செய்யாமலே இருந்த அரசர்கள் ஒரு ரகம் என தொன்று தொட்டு இருந்தே வந்திருக்கின்றனர்.

இருக்கட்டும்! முதலில் அந்த தாய்” நல்லது செய்தால் ஏன் மக்களுக்கு பிடிப்பதில்லை” என்று சொன்னதன் காரணத்தைஆராய்வோம்.

நல்லது என்பது உடனடி நல்லதா நீண்ட காலம் கழித்து நிலைத்து நிற்கும்நன்மையா என்பது மக்களின் புரிதலில் அடங்கியுள்ளது.மக்களுக்கு நிரந்தர நன்மை செய்ய வேண்டி முனைந்து நிற்கும் தலைவர்கள் களத்தில் இறங்கும்போது சில களைகளை எடுக்க நேரிடும்.

அப்போது சில சில சத்தங்கள் வரத்தான் செய்யும்.அதாவது இதென்ன இவர் பெரிய உத்தமரோ?என்ன புதுசா புரட்ட போகிறாரோ என்றெல்லாம் சமுதாயத்தில் வேடிக்கை பார்க்கும் நபர்கள் கூச்சல் போடத்தான் செய்வர்.அந்த சத்தத்தில் உடனடி நலன் எதிர்பார்த்துஅது உடனடியாக வராமல் ஏமாந்த மக்களுக்கு இந்த சத்தம் காதில் விழுந்து அவர்களை உபத்ரவம் செய்கிறது.

தீயவர்கள் பாதிக்கப்படும்போது சத்தம் வருகிறது.ஏதும் செய்யாமல் இருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை.ஏனெனில் களை எடுப்பவர் முனைப்பாக இருக்கும்போது நல்லவர்களுக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

இந்தஒண்ணுமே செய்ய முனையாமல் இருந்திருக்கிறாரே(தலைவராக) அவர் பாடு சுலபம்.

அவர் லஞ்ச ஊழல் செய்பவரோடோ,
தீவிரவாதியுடனோ தொடர்பு கொள்பவராகவோ,
ஊடகங்களோடு தோழனாக கூட இருக்கலாம்..நல்லவர் கெட்டவர் என்று அலட்டிக் கொள்ளாமல் யாரோடயும் தொடர்பு கொள்பவராய் இருப்பார்.

எல்லோருக்கும் நல்லவராக இருப்பார்.வல்லவராக இருக்க முயலவே மாட்டார்.எதுவும் செய்யாமல் இருப்பவர் இருக்கும்போது எல்லாமே நலமாக இருப்பது போல தெரியும்.

இப்போது களை எடுக்க முனைபவர்பால் உடனடி நன்மை எதிர்பார்க்காதவன்..நீண்ட கால தீர்வுதான் நிரந்தர தீர்வு என நம்பியவன் அந்த தலைவனிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறான்?

”அவர் தன்னலம் இல்லாதவரா,நாணயம் மிக்கவரா,தேச நலன் உடையவரா,யாருடைய கைப்பாவை ஆக இல்லாமல் இருக்கிறாரா,எவ்வித குற்றச்சாட்டோ அவரிடம் இல்லையா, இறைவன் அருள் உள்ளவரா,அயராது தனது இலஷியத்தை நோக்கி உழைப்பவரா…”
என்று பல தரக்கட்டுப்பாட்டுடன் அவரை எடை போடுகிறான்.

அப்படி ஒரு தலைவனை இனம் கண்டு கொண்டு விட்டால் போதும்:அவனுக்கு வரும் கிளர்ச்சியினை சொல்லி மாளாது!

உடனடி பலன் வராவிட்டாமலும் பரவாயில்லை நாம் கொஞ்சம் அவருக்கு அவகாசம் கொடுக்கலாமே என்று அவரிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்து நம்பிக்கையுடன் காத்துக் கொள்ள தயாராகி விடுவான்.

ஏனெனில் அவனுக்கு கடந்த கால அனுவங்களில் கிடைத்த பாடம் இதுவே!

“ இத்தகைய குண நலன்கள் இல்லாதவரை நம்பினால் நன்மை நமக்கும் தேசத்துக்கும் ஏற்பட போவதே இல்லை”என்பதை அவன் கசப்புடன் உணர்ந்தே வந்திருக்கிறான்.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

இப்போ logic நியாய சாஸ்த்ரத்தின் இரு பக்கமும் நிறைவு பெற்றாயிற்று.

இனி இக்குட்டிக் கதையில்பொதிந்திருக்கும் நியாயத்தை பாருங்கள்.

.கடவுளுக்கு பிடித்து விட்டால்.எதுவும் நல்ல படியாக முடியும்.அம்மகன் சொன்னது”நல்லது செய்தால் கடவுளுக்கு பிடிக்கும்”என்பது மட்டுமே!
அதன் நீட்சி இதுவே!

கடவுள்,அப்படிப்பட்ட நன்மை செய்ய முனைந்த..செய்கிற, அத்தலைவனை மக்களுக்கு பிடிக்கும்படி செய்து விடுவார்!.

ஏனெனில் கடவுளுக்கு மக்களுக்கு நன்மைஏற்படணும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதல்லவா?எனவே அந்த களை எடுக்க வந்த அம்மகானை மக்களுக்கு பிடிக்க செய்ய இறைவனே அருள் புரிவார்.

ஸ்வாமி வேளுக்குடி க்ருஷ்ணன் என்பணி என்ற app மூலம் தெரிவித்த கருத்தை ஓரளவு சிதைக்காமல் எழுதியுள்ளேன் என நம்புகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories