December 6, 2025, 10:53 AM
26.8 C
Chennai

போகாத ஊருக்கு வழி தேடி என்ன பயன்? #Nesamani #நேசமணி

nidhi chowdri1 - 2025சமூக வலைத்தளங்களில் நேசமணி போன்ற தேவையில்லாத பதிவுகளை எல்லாம் வளர்த்தார்கள். தற்போது காந்தி படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க வேண்டும், சிலைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் .

இது போன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களிடம் பதற்றத்தை உருவாக்குகிறது. இத்தகைய கருத்துகள் விளையாட்டுத்தனமான காரியம் அல்ல. தவறாகவும், கேளிக்கையாகவும் ஆக்கப்பூர்வமற்ற முறையிலும் சமூக வலைத்தளங்கள் செல்வது நியாயமா? இது சரியான அணுகுமுறைதானா என்பதை சிந்திக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் என்பது இன்றைய காலத்தில் ஒரு ஊடகத்தைவிடவும் அதிவிரைவில் மக்களை சென்றடைகிறது.

nidhi chowdri - 2025சில துறைகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இத்தகைய நிலையில் இதன் நம்பகத்தன்மையும், கருத்துச் சுதந்திரத்தையும் சிலர் தவறாக பயன்படுத்திவருவதுஅதிர்ச்சியளிக்கிறது.

சில பிரச்சனைகள், தளத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், இதயப்பூர்வமாகவும் விவாதிக்கவும், அந்த விவாதத்தின் மூலம் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் . அதைவிடுத்து, வெட்டியாக நேரத்தை வீணடித்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு, திசைதிருப்புவதையும், பயனற்ற, உண்மையற்ற, கற்பனையான விடயங்களை பேசி விபரீதமாக்காமல் மக்கள்நல பிரச்சனைகளை பேசுவதும் விவாதிப்பதும் நல்லது.

nidhi chowdri2 - 2025நான் எப்போதும் குறிப்பிடுவது போல, “Issues are non-issues here. Non-issues are Issues here.” அதாவது ‘’பிரச்சனைகளை பிரச்சனைகளாக கவனிக்காமல், பிரச்சனை யில்லாதவற்றை பிரச்சனையாக பாவிப்பது தான்’’ இன்றைய யதார்த்த நிலை. இதுபோன்ற பதிவுகள் தேவைதானா?

ஒரு படித்த அதிகாரி தேசமே போற்றும் ஒரு தலைவரான காந்தியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை இட்டுவிட்டு, கண்டனங்கள் எழுந்தபிறகு நான் வேடிக்கையாக போட்டேன் என்று சொல்வதெல்லாம் அவர் தகுதிக்கும், வகிக்கும் பொறுப்புக்கும் உகந்ததல்ல. உண்மையாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை விடுத்து போகாது ஊருக்கு வழி தேடி என்ன பயன்?

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,) 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories