சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

16. ஒன்பது ரகசியங்கள்.

செய்யுள்:

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமௌஷதம்|

தபோ தானாவமானே ச நவ கோப்யானி காரயேத்||

– ஹிதோபதேசம்.

பொருள்:

வயது, வருமானம், வீட்டுக் கலகம், தனிப்பட்ட ரகசியங்கள், மந்திரம், மருந்து, தவம், தானம், அவமானம் – இந்த ஒன்பது விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

விளக்கம்:

சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால்தான் மனித கௌரவம் நிலைக்கும். வெளியில் யாரிடமும் கூறக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்த சுலோகம் விவரிக்கிறது. நாம் பிறரோடு வெளிப்படையாக விவாதிக்க கூடாதவற்றுள் முதலாவது நம் வயது. நம் வரவு செலவு, வருமானம் போன்ற பொருளாதார விஷயங்களை அனாவசியமாக பிறரிடம் ஒப்புவிப்பது தவறு. பணம் இருப்பது தெரிந்தால் கடன் கேட்பார்கள். கடன் இருப்பது தெரிந்தால் விலகிச் செல்வார்கள். அதே போல் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய, பெரிய குடும்பக் குழப்பங்களை தேவையில்லாமல் பிறரிடம் கூறினால் அது நான்கு சுவர்களைத் தாண்டி வீதிக்குச் செல்லும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம்.

அதேபோல் நண்பர்கள் என்று எண்ணி சம்சார ரகசியங்களையோ குடும்ப ரகசியங்களையோ கூறிவிட்டால் பின்னர் அதே நண்பர்கள் பகைவர்களாக மாறும் போது, என்ன ஆகும்? எப்போது நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்ச நேரிடும். எச்சரிக்கை தேவை என்கிறது ஸ்லோகம்.

அதேபோல் நமக்கு குருமார்கள் உபதேசித்த மந்திரத்தை வெளியிடக்கூடாது. அடுத்தது மருந்து. நமக்கு இருக்கும் நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் பற்றி பிறருக்குக் கூறவேண்டிய தேவையில்லை. அதை கேட்பவர்கள் ஆளுக்கொரு அறிவுரை கூறுவர். இவ்விதம் பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடாத அம்சங்கள் பற்றி நம் கலாச்சாரத்தில் மிகவும் கவனமாக எடுத்துரைத் துள்ளார்கள். கேட்டு நடப்பது நம் கடமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories