சுபாஷிதம்: அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

Published:

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

85.  அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்! 

ஸ்லோகம்:

வ்ருத்தானாம் வசனம் ஸ்ருத்வா யோ௨ ப்யுத்தானம் ப்ரயோஜயேத்|
உத்தானஸ்ய பலம் சம்யக் ததா ஸ லபதே௨சிராத்||
– மஹாபாரதம்.

பொருள்:

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களின் சொல்படி கேட்டு செயல் புரிவோருக்கு நல்ல பலன் குறைந்த நேரத்திலேயே எளிதாகக் கிடைக்கும்.

விளக்கம்: 

‘பெரியோர் கூற்று பழைய அமுதுக்கு மாற்று’ என்றொரு பழமொழி உள்ளது. பழைய அன்னம் உடலுக்கு குளிர்ச்சி தந்து நலம் பயப்பது போல பெரியோர் கூறியதை கேட்பதால் வாழ்வில் நலன் விளையும் என்பது இதன் பொருள்.

அனுபவம் நிறைந்த முதியோரின் வழிகாட்டலால் எளிதில் வெற்றியை அடையலாம் என்று கூறும் மகாபாரத ஸ்லோகம் இது.

அதனால்தான் மகாபாரதப் போர் முடிந்தபின் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் தர்ம சூட்சுமங்களை கற்றுக் கொள்ளும்படி தர்மபுத்திரனைப் பணித்தார் கிருஷ்ண பகவான்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

வம்ச பரம்பரையாக நமக்கு கிடைத்து வரும் ஞானம் முதியோரான அறிஞர்களிடமிருந்தே அல்லவா? 

வயதில் பெரியவர்கள் பல அனுபவங்களைத் தாண்டி வந்தவர்கள். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள், தடைகள் போன்றவற்றை அவர்களும் எப்போதோ பார்த்திருப்பார்கள். அதனால் அவர்களின் அறிவுரைகளை கேட்டுப்  பெறவேண்டுமென்று எடுத்துரைக்கிறது இந்த ஸ்லோகம். எவ்வாறு நடந்து கொண்டால் நல்லது என்று அவர்கள் வழிகாட்டுவார்கள். 

நம் முயற்சியும் அவர்களின் அனுபவமும் சேரும்போது குறைந்த நேரத்தில் அதிக பலன் பெற முடியும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img