December 6, 2025, 3:57 AM
24.9 C
Chennai

வாழ்ந்தால் வல்லூறு.. இல்லையேல் வாழ்க்கையே பெரும் ஊறு!

kazhugu - 2025

கழுகுகள் சிறு பறவைகளாக இருக்கும் போதே தம் பெற்றோரால் கூட்டில் இருந்து கீழே உதறித் தள்ளப்படும். பின் அவை பறக்கும் சக்தி பெற்று பறந்து திரிந்து உணவு தேடும்.

தன்னை எதிர்க்கும் பறவைகளிடமிருந்து தன்னையும் தன் வாழ்விடத்தையும் காத்துக் கொள்ள மூர்க்கமாக சண்டையிடும். இது இப்படியே போய்க்கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் மூக்கு நகத்தின் கூர் மழுங்கி… கால் நகங்கள் வளர்ந்து உடல் கனத்து பறக்க முடியாமலும் முன் போல் சண்டை செய்ய இயலாமலும் போகும்…

இதுதான் அவற்றின் திருப்புமுனைக் கட்டம்.

வாழ்ந்தால் வல்லூறு (ராஜாளி) இல்லையேல் வாழ்வதற்கே பெரும் ஊறு..!

இந்தக் கட்டத்தில் அவை பெரும் மலைகளின் உச்சிக் குன்றின் மீதமர்ந்து தன கூர் மழுங்கிய அலகால் தன் உடலின் இறக்கைகளை குருதி சொட்டச் சொட்ட பிய்த்தெறியும்.

தனது கால் நகங்களை மலை முகடுகளில் முட்டி உடைத்தெறியும்.  தன் பருத்த அலகை கூர்செய்ய மலை மீது மோதி உடைத்தெறிந்து குருதிச் சேற்றிலேயே கண்ணயராது காத்திருக்கும்.

இத்தகைய நிலைகண்டு எளிதில் வீழ்த்தி கதை முடிக்க எண்ணி வரும் பகைவரையும் அஞ்சாது எதிர்த்து வீழ்த்தும்.  மாரியும், வாடையும், செந்தழல் வீசும் வெய்யோனின் வெப்பமும் மாறிமாறி வந்தாலும் உணவு துறந்து உடல் பலம் பெறக் காத்திருந்து தோகையும், கூரிய நகமும், மின்னும் வேல்களை ஒத்த அலகும் பெற்று ஆதவனின் வெளிப்படு திசையில் முடிவிலா உயரத்தில் பறந்து தன் குரலால் வெற்றி முழக்கமிட்டு தன் மீள்கையை உணர்த்தும்…

இனி அது சாதாரண கழுகு அல்ல… அதுவே ராசாளி…!

ஒவ்வொரு மாந்தர்க்கும் வாழ்க்கை தன் வாழ்க்கையை மாற்ற ஒரு கணம் கொடுக்கும்…

அத்தருணத்தில் முடிவெடுப்போம் நாம் வாழப் போவது வல்லூறாகவா? அல்லது…

கருத்து: ஸ்ரீ கிருஷ்ண விக்னேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories