வாழ்ந்தால் வல்லூறு.. இல்லையேல் வாழ்க்கையே பெரும் ஊறு!

kazhugu - 2026

கழுகுகள் சிறு பறவைகளாக இருக்கும் போதே தம் பெற்றோரால் கூட்டில் இருந்து கீழே உதறித் தள்ளப்படும். பின் அவை பறக்கும் சக்தி பெற்று பறந்து திரிந்து உணவு தேடும்.

தன்னை எதிர்க்கும் பறவைகளிடமிருந்து தன்னையும் தன் வாழ்விடத்தையும் காத்துக் கொள்ள மூர்க்கமாக சண்டையிடும். இது இப்படியே போய்க்கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் மூக்கு நகத்தின் கூர் மழுங்கி… கால் நகங்கள் வளர்ந்து உடல் கனத்து பறக்க முடியாமலும் முன் போல் சண்டை செய்ய இயலாமலும் போகும்…

இதுதான் அவற்றின் திருப்புமுனைக் கட்டம்.

வாழ்ந்தால் வல்லூறு (ராஜாளி) இல்லையேல் வாழ்வதற்கே பெரும் ஊறு..!

இந்தக் கட்டத்தில் அவை பெரும் மலைகளின் உச்சிக் குன்றின் மீதமர்ந்து தன கூர் மழுங்கிய அலகால் தன் உடலின் இறக்கைகளை குருதி சொட்டச் சொட்ட பிய்த்தெறியும்.

தனது கால் நகங்களை மலை முகடுகளில் முட்டி உடைத்தெறியும்.  தன் பருத்த அலகை கூர்செய்ய மலை மீது மோதி உடைத்தெறிந்து குருதிச் சேற்றிலேயே கண்ணயராது காத்திருக்கும்.

இத்தகைய நிலைகண்டு எளிதில் வீழ்த்தி கதை முடிக்க எண்ணி வரும் பகைவரையும் அஞ்சாது எதிர்த்து வீழ்த்தும்.  மாரியும், வாடையும், செந்தழல் வீசும் வெய்யோனின் வெப்பமும் மாறிமாறி வந்தாலும் உணவு துறந்து உடல் பலம் பெறக் காத்திருந்து தோகையும், கூரிய நகமும், மின்னும் வேல்களை ஒத்த அலகும் பெற்று ஆதவனின் வெளிப்படு திசையில் முடிவிலா உயரத்தில் பறந்து தன் குரலால் வெற்றி முழக்கமிட்டு தன் மீள்கையை உணர்த்தும்…

இனி அது சாதாரண கழுகு அல்ல… அதுவே ராசாளி…!

ஒவ்வொரு மாந்தர்க்கும் வாழ்க்கை தன் வாழ்க்கையை மாற்ற ஒரு கணம் கொடுக்கும்…

அத்தருணத்தில் முடிவெடுப்போம் நாம் வாழப் போவது வல்லூறாகவா? அல்லது…

கருத்து: ஸ்ரீ கிருஷ்ண விக்னேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories