வீடியோ பொறுக்கிகளும் விட்டில் பூச்சிகளும்!

lady sleep - 2026

முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேலே முள்ளு விழுந்தாலும் பாதிப்பு பொம்பளைகளுக்குத்தான்னு பெரியவங்க தெரியாமலா சொன்னாங்க.!

வீடியோ பொறுக்கிகளை உச்சபட்ச தண்டனையாகத் தூக்கிலே போடணும்.
இல்லேங்கலே.. ஆனால், பெண்கள் கவனமா இருக்க வேண்டாமா?

டிக்டாக்கிலே வயசு வித்தியாசம் இல்லாமல் பெண்கள் தங்களை எக்ஸ்போஸ் பண்ணிக்கற அளவு வந்துட்டீங்க. கொஞ்சம் கூட கூச்ச நாச்ச மில்லையாம்மா!

புடவைத் தலைப்பை நீளமாக விட்டு இழுத்துச் செருகிக் கொண்டு போன காலம் போய் அபரிமிதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் மென்டாலிடி எதனால் வந்தது.?

படிப்பா ..? பணமா..?

இரண்டும் இல்லை.  விஷமத்தனமாக பெண்ணீயம் என்ற பெயரில் விதைக்கப்பட்ட கம்யூனிச /ஈவெராயிஸ்ட் கருத்துகளால்..

ஆந்திராவிலே ஒரு காட்டுக்குள்ளே குகைக்கு பதினாறு பதினேழு வயசுப் பொண்ணு இன்னொரு கூடப் படிக்கிற பையனோடு போகுது. காதலா இது..?அங்கே பொறுக்கிகள் அந்தப் பொண்ணை சிதைச்சு கொன்னும் போட்டு அந்தப் பையனையும் அடிச்சதுல குத்துயிரா கிடக்கிறான்.

பொண்ணுகளா…. படிங்கம்மா! நல்ல நிலைமைக்கு வாங்க. கஷ்டப்பட்டு படிக்க வெச்ச உங்கப்பன் ஆத்தாளை நல்லவிதமா பாத்துக்கிடுங்க.
நேர்மையான காதலோ பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ அதன் பின்னும் குடும்பம் சிறப்பதில் உங்க பங்கிருக்கு கண்ணுங்களா..

உங்க குழந்தைகளை நல்ல புள்ளைகளா வளர்க்கணும்னா அதுங்களுக்கு ஒரு ஐடியல் அம்மாவா நீ இருக்க வேண்டாமா..?

கம்யூனிச சிந்தனாவாதி என்று அறியப்பட்ட பாரதிதாசனின் குடும்ப விளக்கை ஒரு முறை படிச்சுப் பாருங்க.

குடும்பம் என்பது கண்ணுக்குத் தெரியாத அன்பெனும் நூலிழையால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் கட்டப்பட்டிருப்பது புரியும்.

பெண்ணுக்குப் படிப்பு அவசியம்னு பாரதியார் முதல் அத்தனை பெரியோர்களும் குரல் கொடுக்கக் காரணம் ஒரு பெண்கள் கல்வியறிவு பெற்றால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமின்றி சமுதாய ஒழுங்கு மேம்படும் என்றுதான்.

இருகோடுகள் படத்தில் நாகேஷ் பாரதியாக ஒரு பாடலில் வந்து கேட்பார்.

“அறிவைத்தானே வளர்க்கச் சொன்னேன். ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்” என்று.

இன்னிக்கு நீங்க படிச்சதுக்கு அர்த்தமே இல்லாம பண்றீங்களேம்மா.
படிப்பு என்பது வெறும் பாடப் புத்தகம் மட்டும்தான்னு நினைக்கிறியா பொண்ணே..

இல்லடா… படிப்பைத் தாண்டி வாசிப்பு. நாம எப்படிப் பட்டவற்றைப் படிக்கணும் கற்கணும் வாசிக்கணும்னு ஏற்படக் கூடிய தெளிவே கல்வி கொடுத்த அறிவு. அது புரியலைன்னா 99% எடுத்துப் பாஸ் பண்ணினாலும் வேஸ்டுடா கண்ணுங்களா..

இணையதளம் என்பது நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பு. அவ்வளவே. இது காதல் பண்ணும் களமல்ல ! இங்கே ஏமாறுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்னு தெரியாத கூறு கெட்டவளாம்மா நீனு..

மறுபடியும் சொல்றேன். நீயாப் போனாலும் அவனுகளா வந்தாலும் நட்டம் உனக்கு. உன் குடும்பத்துக்கு. உன்னை பெத்தவங்க. நீ சின்னக் குழந்தை உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு அளவற்ற நம்பிக்கை வெச்சுருப்பாங்க..
அவங்களுக்கு துரோகம் பண்ணாதே.

இனியாச்சும் சூதானமா நடந்துக்க.

இப்படிக்கு
உங்கள் அம்மா ஸ்தானத்தில் கீதா சுரேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories