க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்


“க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்”- பெரியவாள்

(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)

சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்
………………………காஞ்சிபுரம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒரு சிற்றுண்டிச் சாலையின் முதலாளியான முதலியாரை, யாரோ வசியம் செய்து, தவறான வழியில் போகச் செய்து விட்டார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமைப்பட்டுப் போனார்.தன்னுடைய சொத்துக்களில் பெரும்பகுதியை அந்தப் பெண்ணிடம் இழந்தார்.

குடும்பத்தாருக்கு கவலை வந்து விட்டது.சொத்துகள் போனாலும் பரவாயில்லை. உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே?

சங்கரன் முதலியார் என்ற பரம பக்தர் ,பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.”அவர் நல்லவர்; மந்திரத்தால் அவர் மனத்தை மாற்றிவிட்டார்கள்” என்றார்.

அன்று மூல நக்ஷத்ரம். பெரியவாள் மௌனம்.

முதலியார் சொன்ன விவரங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, கண்களை மூடிய வண்ணம் சிறிது நேரம் இருந்தார்கள். பின், மூன்று விரல்களை உயர்த்திக் காட்டினார்கள். முதலியாருக்கு பொருள் விளங்கவில்லை.

“எனக்குப் புரியல்லீங்களே….”

பெரியவாள் தரையில் மூன்று என்ற இலக்கத்தைப் போட்டுக் காட்டினார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

மூன்று என்பது புரிந்தது முதலியாருக்கு. ஆனால் அதன் அர்த்தம் என்ன?

குழப்பத்துடன் காஞ்சிபுரத்துக்கு திரும்பிவிட்டார், முதலியார். ‘பெரியவாளிடம் சொல்லிவிட்டோம்’ என்ற ஒரு சிறு திருப்தி.

மூன்றாம் நாள் ஏமாந்து போனவர் வீட்டு வாசலில் ஒரு ரிக்‌ஷா வந்து நின்றது. ஒரு பெண்மணி இறங்கினாள்.- இரண்டு மூன்று பைகளுடன். இவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. அவைகளை யெல்லாம் அவரை நோக்கித் தூக்கி யெறிந்துவிட்டு, ஒரு வார்த்தப் பேசாமல் அதே ரிக்‌ஷாவிலேயே போயே போய்விட்டாள் – ஊரிலிருந்தே!

பைகளில், கேரளத்துப் பெண்ணுக்கு அவர் கொடுத்த புடவை – துணிமணி,நகை -நட்டு எல்லாம்! ஒரு குந்துமணி தங்கம் கூடக் குறையவில்லை.

க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள் பெரியவாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories