ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

irattaikkaradu ramanujar
irattaikkaradu ramanujar

பகவத் ராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும் இரட்டைக்கரடு வனப் பகுதியில் அமைந்த சுவாமி ராமானுஜரின் சிறிய சந்நிதியில் எம்பெருமானார் ஜயந்தி விழா நடத்தப் பெற்றது.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காவிரிக் கரை வழியே கர்நாடகம் மைசூர் பகுதியில் உள்ள மேல்கோட்டை திருநாராயணபுரம் செல்லும் வழியில் இரட்டைக்கரடு எனப்படும் இந்த வனப் பகுதிக்கு வந்திருக்கிறார். அங்கே அவர் ஓர் அதிசயத்தை நிகழ்த்தினார்.

அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் இரண்டு கருடன்கள் மிக ஆக்ரோஷமாக சண்டையிட்டபடியும், மக்களை அச்சுறுத்தியும் இருந்தன. இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், இந்த கருடன்களின் ஆக்ரோஷத்தைக் கண்டு பெரிதும் அச்சமடைவார்கள். மகாசாதுவான ஸ்ரீராமானுஜர் இந்த வழியாக மேல்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்தவர்கள் இந்த இரட்டை கருடன்களைக் குறித்து சொல்லி, ராமானுஜரை எச்சரிக்கை செய்தார்கள்.

மேலும், சுவாமியின் தவ வலிமையால் தங்களை பாதுகாக்க உதவுமாறும் கோரினர். பகவத் ராமானுஜர் அன்பர்களால் ஆதிசேஷன் அம்சம் எனப் போற்றி வணங்கப் படுபவர்.

அன்று இரவு ஸ்ரீராமானுஜர் அந்த இடத்தில் தங்கியிருந்துள்ளார். அப்போது இரு கருடன்களும் வரவே, அவரற்றைத் தம் தபோவலிமையால் சாந்தப் படுத்தி, அவற்றைத் திருத்திப் பணி கொண்டார். இந்தத் தகவல் இங்குள்ள செப்பேட்டில் குறித்து வைக்கப் பெற்றிருக்கிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

பவானி நதியும் காவிரியும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது இரட்டைக் கரடு. முன்னர் இரட்டைக் கருடன் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் மருவி இரட்டைக்கரடு ஆனதாம். இங்கே பெரிய அளவில் சுவாமி ராமானுஜருக்கு ஆலயம் என்று எதுவும் இல்லை. ஆயினும் சிறிய கட்டடம், சிறிய அளவிலான பாறைக்குவியல்களுக்கு மத்தியில் சுவாமி ராமானுஜரின் அழகிய சிற்பம் வடிக்கப் பெற்றிருக்கிறது.

irattaikkaradu ramanujar jayanthi
irattaikkaradu ramanujar jayanthi

இங்குள்ளவர்கள் சுவாமி ராமானுஜரைப் போற்றி துதிக்கின்றனர். பெரிய அளவில் பராமரிப்பு ஏதும் இல்லை என்றாலும், முக்கிய நாட்களில், ராமானுஜரின் ஜயந்தி தினம் போன்ற விசேஷ நாட்களில் இங்கே பூஜைகளை செய்து மகிழ்கின்றனர். சுவாமி ராமானுஜரின் இந்தத் திருமேனி இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டு 800 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்கிறார்கள்.

இங்கே, தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories