மனம் அறிந்து அருளும் குரு:

Published:

abinav vidhya theerthar

ஒரு ஏழை பக்தர் ஜேஷ்ட மகாசன்னிதானம் அவர்களை தனது வீட்டிற்கு அழைப்பதிலும், பாத பூஜை செய்வதிலும் ஆர்வமாக இருந்தார். மடத்தின் ஊழியர்கள் அவரிடம் அவ்வாறு செய்வதற்கு ரூ. 250. டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறினார்கள்.

மடத்திற்கு செலுத்த அவரிடம் தொகை இல்லை, எனவே, அவர் தனது திட்டத்தை கைவிட்டார். ஆச்சாரியாள் பாத பூஜைக்காக அவருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றபோது, ​​அந்த பக்தர் அங்கு வந்து ஒரு மூலையில் நின்று ஆச்சார்யாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆச்சார்யாள் அவரைக் கவனித்தார் பின் அவரை அழைத்தது, அவரிடம், “உங்களுக்கு என்ன தொந்தரவு?” என்று கேட்டார். அந்த மனிதன் தனது துயரக் கதையை கூறினார். தான் அவருக்கு பாதபூஜை செய்ய ஆவலுற்றதையும் அவர் தங்கள் மனைக்கு அழைக்க விருப்பம் கொண்டதையும் கூறினார். ஆச்சாரியாள் அவரை உற்சாகப்படுத்தி, அவரது வீட்டிற்குச் சென்று தயாராக இருக்கச் சொன்னார்.

abinav vidhya theerthar

பாத பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம் முடிந்ததும், ஏழை மனிதனின் வீட்டிற்கு செல்ல அவர் கருணை கொண்டதை மடத்தின் ஊழியர்களுக்கு அறிவித்தார் அவர் அங்கு சென்று பாத பூஜை செய்ய ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். அவர் பாத பூஜையை முடித்த பிறகு, ஆச்சாரியாள் அவருக்கு பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்.

abinav vidhya theerthar

மேலும் அவர் தனது தனி செயலாளரிடம் அந்த பக்தருக்கு பணமும் கொடுத்து உதவுமாறும் கூறினார்கள். அதே போல் அவருக்கு பணமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, பரிசுத்தமான பக்தரின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி வைத்தார்கள் நமது குரு. தூய்மையான பக்தியை அவர்கள் கண்டறிவார்கள். அனைத்தையும் அறியும் திறன் கொண்டவர். எதைதான் அவர்கள் அறிய மாட்டார்கள். அந்த பக்தரை எதையும் செலவழிக்க வேண்டியதில்லை என்பதையும், அவருக்கு விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்களை வழங்குவதைத் தவிர பண ரீதியாகவும் அவருக்கு உதவி செய்தார். கருணாவடிவமாகி விளங்கும் ஜகத்குரு அனைவரும் அறிந்த ஒன்று. இச்சம்பவம் இன்னும் தெளிவுப்படுத்தும் வகையில் அமைந்த ஒன்றாகும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img