காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

Published:

naradha dhruva - 2026

கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான வாசுதேவனின் (கிருஷ்ணன்) நாமம் எப்போதோ நடந்த துருவனின் கதையில் வருவதாகக் கூறுவது சரியா?

பதில்:- ‘வாசுதேவ’ என்றால் ‘வஸத் தீவ்யதே இதி வாசுதேவ:’ – அதாவது ‘சகல ஜீவராசிகளிலும் இருந்து பிரகாசிப்பவன்’ என்று பொருள். விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள சைதன்யமே வாசுதேவன். இது விஷ்ணுவுக்குண்டான குண விசேஷப் பொருள். இது மகா மந்திரங்களுள் ஒரு நாமம். இந்த விஷ்ணு மந்திரத்தையே துருவனுக்கு நாரதர் உபதேசம் செய்தார்.

விஷ்ணு எடுத்த கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு முன்பே இருந்த தன் நாமங்கள் அனைத்துக்கும் வேறு பொருளைக் காட்டி அருளியபடி அவதரித்தார். அதாவது அவரோடு கூட அவருடைய திவ்ய நாமங்களும் அவதரித்தன.

விஷ்ணு, வசுதேவருக்குப் புதல்வனாகப் பிறந்ததால் கிருஷ்ணனுடைய வாசுதேவன் என்ற பெயரோடு கூடிய அவாதார லீலை வெளிப்படுகிறது. அதே நேரடத்தில் விஷ்ணுவுக்குண்டான அர்த்ததையும் நினைவுபடுத்துகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img