குலாலேப்ய கர்மாரேப்யச்ச வோ நமோ நம (குயவர்களாகவும் கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம்- ஸ்ரீருத்ரம்)

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம”

(“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!”)

(ஒரு குயவனுக்கு அனுக்ரஹமும் அறிவுரையும் பண்ணிய பெரியவா)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.13238992 246319219064254 1237027586143027918 n - 2026

பக்தர்கள் பலவிதமான – தேங்காய்,பழம், கற்கண்டு மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.

ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு வந்து பெரியவாள் முன்பாக வைத்துவிட்டு வணங்கினான்.

அவன் கொண்டுவந்திருந்த மண்சட்டி,பானை, அகல் விளக்கு போன்றவைகளை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து, தடவிப் பார்த்து குழந்தைபோல் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அருகிலிருந்த தொண்டரைப் பார்த்து,

“உனக்கு ஸ்ரீருத்ரம் தெரியுமோ?” என்று கேட்டார்கள்.

“தெரியும்”

“நாலாவது அனுவாகம் சொல்லு..”

தொண்டர், ” நம ஆவ்யாதினீப்யோ…” என்று தொடங்கி சொல்லிக்கொண்டே போனார். இடையில் “குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம” என்ற வாக்கியம் வந்ததும், பெரியவாள் ஜாடை காட்டி நிறுத்தச் சொன்னார்கள்.

“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!” என்று உணர்ச்சியோடு மொழிந்தார்கள் பெரியவாள்.

மண்பாண்டங்கள் கொண்டுவந்த குயவனுக்கு வேஷ்டி – புடவை கொடுக்கச் சொன்னார்கள்.

“மவனுக்கு படிப்பு வரலீங்க,சாமி” என்று முறையிட்டான் குயவன்.

“உனக்கு படிக்க தெரியுமா?”

“தெரியாதுங்க…”

“பையன் படித்தால் நல்லது.டியூஷன் வைத்தாவது சொல்லிக் கொடு. படிக்காவிட்டாலும் பரவாயில்லை .உன் தொழிலைக் கற்றுக்கொடு.உன்னைக் (படிப்பறிவில்வராமல், ஒரு தொழில் மட்டும் தெரிந்த உன்னை) காப்பாற்றும் கடவுள் அவனையும் காப்பாற்றுவார்…”

குயவன் பிரசாதம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாகப் போனான்.

பெரியவாளின் சொற்களுக்கு அழிவு கிடையாது.

கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories