December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா கூறும் விஷயங்கள் என்ன?

advice 1 - 2025பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில. :

  1. எது இதமானது ?
    தர்மம்.

  2. நஞ்சு எது ?
    பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.

  3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
    பற்றுதல்.

  4. கள்வர்கள் யார் ?
    புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

  5. எதிரி யார் ?
    சோம்பல்.

  6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
    இறப்புக்கு.

  7. குருடனை விட குருடன் யார் ?
    ஆசைகள் அதிகம் உள்ளவன்.

  8. சூரன் யார் ?
    கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

  1. எது துக்கம் ?
    மன நிறைவு இல்லாமல் இருப்பது.

  2. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
    குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

  3. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
    இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.

  4. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
    நல்லவர்கள்.

  5. எது சுகமானது ?
    அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

  6. எது இன்பம் தரும் ?
    நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

  7. எது மரணத்துக்கு இணையானது ?
    அசட்டுத்தனம்.

  8. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
    காலமறிந்து செய்யும் உதவி.

  9. இறக்கும் வரை உறுத்துவது எது ?
    ரகசியமாகச் செய்த பாவம்.

  10. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
    துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள். ஆகியோர் !

  11. சாது என்பவர் யார் ?
    ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

  12. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
    சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

  13. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
    எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

  14. செவிடன் யார் ?
    நல்லதைக் கேட்காதவன்.

  15. ஊமை யார் ?
    சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

  16. நண்பன் யார் ?
    பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

  17. யாரை விபத்துகள் அணுகாது ?
    மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும் அணுகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories