பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில. :
- எது இதமானது ?
தர்மம். -
நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. -
மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல். -
கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். -
எதிரி யார் ?
சோம்பல். -
எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு. -
குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன். -
சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
-
எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது. -
உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. -
தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. -
சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள். -
எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. -
எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம். -
எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம். -
விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி. -
இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம். -
எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள். ஆகியோர் ! -
சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர். -
உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். -
யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. -
செவிடன் யார் ?
நல்லதைக் கேட்காதவன். -
ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். -
நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன். -
யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும் அணுகாது.