“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? “-பெரியவா

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து
சென்ற வித்யார்த்தி “படி படி’ என்று எச்சரிக்கை விட்டுண்டே
போனபோது-பெரியவா சொன்னது மேலே)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (179)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஏழுமலையான் சந்நிதியை நோக்கி நடைப்பயணம்
மலைப்பாதை வழியாக -பெரியவாள்.

கண்பார்வை மங்கியிருந்தது.

சமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப்
போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால்
ஆனது.தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர்,
மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச்
செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று
உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்.பெரியவாள்
கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில்
வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று
எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்றுவிட்டார்கள்.

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

வித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.

“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வதி ஸ்வரூபம்..”
அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில்
கெஞ்சினான், வித்யார்த்தி.

“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே..
என்கிறாயா?”

வித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக்கொண்டது.

பெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.

“இனிமேல், படி வந்தால், “கோவிந்தா…கோவிந்தா..ன்னு
சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.

குன்றுகள் வித்யார்த்தியின் குரலை எதிரொலித்தன.
காற்றின் ஒவ்வொரு வீச்சிலும் ‘கோவிந்தா’க்கள்.

பெரியவாள் ஓர் இளஞரைப் போல, வேகமாகப்
படிகளில் ஏறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories