திருப்பள்ளி எழுச்சி -3; சுடரொளி பரந்தன… (உரையுடன்)

thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (3)

பொருள்

சூரியனின் ஒளிபொருந்திய கிரணங்கள் எட்டுத் திக்கும் பரவி விட்டன. விண்ணில் மேவிப் படர்ந்திருந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளி குன்றியது. ஆகாயம் முழுவதும் பரவி இருந்த நிலவின் குளிர்ச்சியான ஒளி மங்கிவிட்டது. வானத்தைப் போர்த்தி இருந்த இருள் விலகியது. பசுஞ்சோலைகளில் வளர்ந்திருக்கும் பாக்கு மரங்களின் பாளைகள் பிரிந்ததால் மென்மையான சுகந்தம் பிறந்தது. காலை நேரத்துக் காற்று அந்த நறுமணத்தைத் தாங்கி அனைத்துப் பகுதிகளிலும் மென்மையாக வீசுகிறது. அழகிய பெருத்த திருக்கரத்தில் ஒளிவீசும் சுதர்சனத்தைத் தாங்கியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

துன்னிய – மேவி நிற்கிற, படர்ந்த

மின்னொளி – மின்னல் போன்ற பிரகாசமான ஒளி

பசுத்தனன் – ஒளிகுன்றிப் போனான்

பனிமதி – குளிர்ச்சியான நிலவு

இவனோ – இந்த

பாயிருள் – பாய்ந்து, விரிந்து செல்கிற இருள்

கமுகு – பாக்கு

மடல் – மூடிய வெளிப்பகுதி

வண்பாளை – அழகான, வலிமையான பாக்கு மட்டைகள்

நாற – மணக்க

கூர்ந்தது – வீசியது

மாருதம் – காற்று

இதுவோ – இந்த

அடல் – போர், வெற்றி

அம் – அழகிய

திகிரி – சக்ராயுதம்

தடக்கை – வலிமையான பெரிய கை

மொழி அழகு

இரவில் இருள் படர்ந்து இருப்பது, ஆகாயம் முழுவதும் தாரகைகள் மேவி இருப்பது, நிலவின் ஒளி விரிந்து பரவி இருப்பது, படர்ந்த சோலைகள், பாளைகள் விரிதல், திசையெங்கும் கதிரொளி பரவுதல், மென்மையாக வீசும் காற்றில் சுகந்தம் விரவிப் பரவி இருப்பது – இங்கே, விரிதல், படர்தல், பரவுதல் என்பதைச் சொல்லும் விதத்தில் உள்ள நயம் கவனிக்கத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories