திருப்பள்ளி எழுச்சி -3; சுடரொளி பரந்தன… (உரையுடன்)

thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (3)

பொருள்

சூரியனின் ஒளிபொருந்திய கிரணங்கள் எட்டுத் திக்கும் பரவி விட்டன. விண்ணில் மேவிப் படர்ந்திருந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளி குன்றியது. ஆகாயம் முழுவதும் பரவி இருந்த நிலவின் குளிர்ச்சியான ஒளி மங்கிவிட்டது. வானத்தைப் போர்த்தி இருந்த இருள் விலகியது. பசுஞ்சோலைகளில் வளர்ந்திருக்கும் பாக்கு மரங்களின் பாளைகள் பிரிந்ததால் மென்மையான சுகந்தம் பிறந்தது. காலை நேரத்துக் காற்று அந்த நறுமணத்தைத் தாங்கி அனைத்துப் பகுதிகளிலும் மென்மையாக வீசுகிறது. அழகிய பெருத்த திருக்கரத்தில் ஒளிவீசும் சுதர்சனத்தைத் தாங்கியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

அருஞ்சொற்பொருள்

துன்னிய – மேவி நிற்கிற, படர்ந்த

மின்னொளி – மின்னல் போன்ற பிரகாசமான ஒளி

பசுத்தனன் – ஒளிகுன்றிப் போனான்

பனிமதி – குளிர்ச்சியான நிலவு

இவனோ – இந்த

பாயிருள் – பாய்ந்து, விரிந்து செல்கிற இருள்

கமுகு – பாக்கு

மடல் – மூடிய வெளிப்பகுதி

வண்பாளை – அழகான, வலிமையான பாக்கு மட்டைகள்

நாற – மணக்க

கூர்ந்தது – வீசியது

மாருதம் – காற்று

இதுவோ – இந்த

அடல் – போர், வெற்றி

அம் – அழகிய

திகிரி – சக்ராயுதம்

தடக்கை – வலிமையான பெரிய கை

மொழி அழகு

இரவில் இருள் படர்ந்து இருப்பது, ஆகாயம் முழுவதும் தாரகைகள் மேவி இருப்பது, நிலவின் ஒளி விரிந்து பரவி இருப்பது, படர்ந்த சோலைகள், பாளைகள் விரிதல், திசையெங்கும் கதிரொளி பரவுதல், மென்மையாக வீசும் காற்றில் சுகந்தம் விரவிப் பரவி இருப்பது – இங்கே, விரிதல், படர்தல், பரவுதல் என்பதைச் சொல்லும் விதத்தில் உள்ள நயம் கவனிக்கத் தக்கது.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories