February 8, 2025, 9:10 PM
27.1 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி -3; சுடரொளி பரந்தன… (உரையுடன்)

thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (3)

பொருள்

சூரியனின் ஒளிபொருந்திய கிரணங்கள் எட்டுத் திக்கும் பரவி விட்டன. விண்ணில் மேவிப் படர்ந்திருந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளி குன்றியது. ஆகாயம் முழுவதும் பரவி இருந்த நிலவின் குளிர்ச்சியான ஒளி மங்கிவிட்டது. வானத்தைப் போர்த்தி இருந்த இருள் விலகியது. பசுஞ்சோலைகளில் வளர்ந்திருக்கும் பாக்கு மரங்களின் பாளைகள் பிரிந்ததால் மென்மையான சுகந்தம் பிறந்தது. காலை நேரத்துக் காற்று அந்த நறுமணத்தைத் தாங்கி அனைத்துப் பகுதிகளிலும் மென்மையாக வீசுகிறது. அழகிய பெருத்த திருக்கரத்தில் ஒளிவீசும் சுதர்சனத்தைத் தாங்கியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

துன்னிய – மேவி நிற்கிற, படர்ந்த

மின்னொளி – மின்னல் போன்ற பிரகாசமான ஒளி

பசுத்தனன் – ஒளிகுன்றிப் போனான்

பனிமதி – குளிர்ச்சியான நிலவு

இவனோ – இந்த

பாயிருள் – பாய்ந்து, விரிந்து செல்கிற இருள்

கமுகு – பாக்கு

மடல் – மூடிய வெளிப்பகுதி

வண்பாளை – அழகான, வலிமையான பாக்கு மட்டைகள்

நாற – மணக்க

கூர்ந்தது – வீசியது

மாருதம் – காற்று

இதுவோ – இந்த

அடல் – போர், வெற்றி

அம் – அழகிய

திகிரி – சக்ராயுதம்

தடக்கை – வலிமையான பெரிய கை

மொழி அழகு

இரவில் இருள் படர்ந்து இருப்பது, ஆகாயம் முழுவதும் தாரகைகள் மேவி இருப்பது, நிலவின் ஒளி விரிந்து பரவி இருப்பது, படர்ந்த சோலைகள், பாளைகள் விரிதல், திசையெங்கும் கதிரொளி பரவுதல், மென்மையாக வீசும் காற்றில் சுகந்தம் விரவிப் பரவி இருப்பது – இங்கே, விரிதல், படர்தல், பரவுதல் என்பதைச் சொல்லும் விதத்தில் உள்ள நயம் கவனிக்கத் தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories