திருப்புகழ் கதைகள்: துன்பங்களை வெல்ல அறிவருளிய கணபதி!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 26
விடமடைசுவேலை திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

உக்ரசேன மன்னனுடைய புதல்வியாகிய தேவகி தேவி நிகழ இருக்கும் உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி “பிள்ளைப் பெருமானே! கணபதியே” என்று அவர் திருநாமங்களைக் கூறித் துதி செய்து முறையிட்டதனால் கண்ண பிரானுக்கு எல்லாத் துன்பங்களையும் வெல்கின்ற அறிவை அருளுகின்ற ஆனைமுகக் கடவுள் பற்றிய திருப்புகழ். இப்போது பாடலைப் பார்க்கலாம்.

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண …… மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் …… அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி …… வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர …… அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் …… அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை …… முகவோனே.

உக்ரசேனரின் புதல்வியாகிய தேவகி தேவி, கம்சன் தனது மகன் கிருஷ்ணனைக் கொல்ல அரக்கர்களை அனுப்புகிறான் என்ற செய்தி கேட்டு, அந்த அரக்கர்கள் அனைவரும் கிருஷ்ணனால் கொல்லப் படுவார்கள் என்ற உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி கணபதியை துதித்ததால் கண்ணபிரானுக்கு விநாயகர் அருள் செய்தார்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அத்தகைய விநாயகர் மாதர் மீது அருணகிரியாருக்கு இருந்த மயக்கத்தைப் போக்கி காத்தருள வேண்டும் என்பது இப்படலின் வழி அருணகிரியாரின் கோரிக்கை.

தேவகி கணபதியை வணங்குதல்

மதுராவின் அரசன் உக்ரசேனன். யதுகுல மன்னன். இவன் கம்சனுக்குத் தந்தை. இவனுடைய மகள் தேவகி.தேவகி விநாயகரை உபாசித்தவள். இவளுடையபுதல்வராகிய கண்ணபிரான் ஆயர்பாடியிலே யசோதை வீட்டிலே வளர்ந்தார். கம்சன், பூதகி, த்ருணாவர்த்தன், சகடாசுரன் முதலிய அரக்கர்கள் பலரைக் கண்ணனைக் கொல்லுமாறு ஏவினான். அதனையறிந்த தேவகி நிகழ இருக்கும் உண்மையை உணர மாட்டாதவளாய் (கண்ணனால் அவ்வரக்கர்கள் மாண்டொழிவார்கள் என்பதை யறியாதவளாய்) புத்திர பாசத்தினால் தன் மகனுக்கு இடர் வருமோ என்று கருதி அஞ்சினாள். அஞ்சிய அவள் தனது உபாசனா மூர்த்தியாகிய விநாயகரைத் துதித்தாள்.

கண்ணன் செய்த லீலைகள் 

கண்ணபிரான் கோகுலத்தில் செய்த லீலைகள் பற்றி அடுத்து வரும் வரிகள் சொல்லுகின்றன. கண்ணபிரான் யாதவர்கள் வீட்டில் உள்ள பாலையும் வெண்ணையையும் திருடினார் என்று சொல்லுகிறார். அதாவது அவர் யாதவர்களுடைய, கோபிகை களுடைய தூய உள்ளத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அடையலவர் ஆவி வெருவ என்ற வரியில் கண்ணனைக் கொல்ல வந்த அரக்கர்கள் ஆவியஞ்சி நின்றார்கள் என்ற செய்தியைச் சொல்லுகிறார். அடிகூர என்ற சொல்லில் உத்தவர் முதலிய அடியவர்கள் கண்ணனுடைய திருவடியிடத்து அன்பு வைத்தார்கள் என்ற செய்தியையும் சொல்லி, தேவகி செய்த பிரார்த்தனையால் விநாயகர் கண்ணபிரானுக்கு அறிவுக்கு அறிவாகி நின்று அவரைக் கொல்லுமாறு வேடம் புனைந்து வரும் அரக்கரின் மாயத்தை உணர்த்தி அருள் புரிந்தார் என்பதைச் சொல்லி இருக்கிறார். ஆதலால் இறை வழிபாட்டினால் எல்லா நலன்களும் எய்துவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories