April 21, 2025, 5:29 AM
29.4 C
Chennai

23 வயது இளைஞனுக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்! திருமணத்திற்கு வீட்டார் சம்மதிக்காததால் எடுத்த விபரீத முடிவு!

love

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் செல்வம். 23 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது.

தஞ்சை வீரமாங்குடியை சேர்ந்த ஜெயாவுக்கு 40 வயதாகிறது… கல்யாணம் ஆகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். குடும்பத்தை காப்பாற்ற சித்தனாள் வேலைக்கு வரும்போதுதான், கொத்தனார் வேலை செய்யும் செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் சாதாரணமாக பழகிவந்த நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக உருமாறியது. இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில்தான் அடிக்கடி வந்து தங்குவார்களாம்.

லாட்ஜ் வாரமெல்லாம் உழைத்து முடித்ததும், அந்த பணத்தை கொண்டு வந்து ரூம் போட்டு ஜாலியாக இருந்துள்ளனர். அதனால் லாட்ஜில் உள்ள ஊழியர்கள் அனைவருக்குமே 2 பேரும் நல்ல அறிமுகம். ஒருகட்டத்தில் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டிலுமே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

திருமணம் வயது வந்த பிள்ளைகளை வைத்து கொண்டு திருமணம் செய்வது சரியில்லை என்று ஜெயா வீட்டிலும், 40 வயது பெண்ணுக்கு 23 வயது மகனை திருமணம் செய்து தர இஷ்டமில்லை என்று செல்வம் வீட்டிலும் எதிர்ப்பு சொன்னார்கள்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி வழக்கம்போல், நேற்று முன்தினமும் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் உள்ள அதே லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.

poison
poison

இந்த நிலையில் நேற்று மதியம் இவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் லாட்ஜ் ஊழியர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். அங்கே ஜெயா – செல்வம் இருவரும் “தற்கொலை செய்யலாம்னு விஷம் குடிச்சிட்டோம். எங்களை காப்பாத்துங்க” என்று அழுதுள்ளனர்.

இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, விஷத்தையும் குடித்த பிறகுதான் இவர்களுக்கு உயிர் பயம் வந்து கதறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  முதல்வருக்கு பேராசிரியர் எடுத்துள்ள பாடம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories