December 6, 2025, 10:08 AM
26.8 C
Chennai

கொரோனா நோயாளி என்று சொல்லி தப்பித்த திருடன்!

theft

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் கடந்த 2 நாட்களாக மர்ம நபர் ஒருவர் வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஊர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த தக்கலை காவல்துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று வீடுகளிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தனர்.
இந்தக் காட்சிகளில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதன் விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க , நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடி ஒன்றில் மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறி மக்கள் ஒருவரைப் பிடித்துத் தக்கலைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளிலிருந்த மர்ம நபரும், மக்கள் பிடித்து வந்த நபரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது ;

முதலில் பகல் நேரத்தில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அங்கு நகையோ பணமோ கிடைக்காத நிலையில் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்தேன்.

அதன் பின்னர் மீண்டும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது என்னைப் பார்த்த மக்கள் சத்தம் போடவே, அவர்களிடம் நான் ஒரு கொரோனா நோயாளி எனக் கூறி தப்பிச் சென்றேன்.

அதன் பின்னரும் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்த நான் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள சங்கர் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இறங்கினேன். ஆனால் அங்கும் எதுவும் கிடைக்க வில்லை.

ஆனால் அவரது வீட்டில் சமைத்து வைத்திருந்த மீன் குழம்பும் சாப்பாடும் இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட மொட்டை மாடிக்குச் சென்று, நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டேன்.

விடிவதற்குள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த நான் குறட்டை விட்டு நன்றாகத் தூங்கி விட்டேன். எனது குறட்டைச் சத்தம் கேட்டு என்னை மக்கள் பிடித்து விட்டனர் என்று கூறினார். வழக்குப் பதிவு செய்த தக்கலை காவல்துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories