April 26, 2025, 10:52 AM
33.1 C
Chennai

கொரோனா நோயாளி என்று சொல்லி தப்பித்த திருடன்!

theft

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் கடந்த 2 நாட்களாக மர்ம நபர் ஒருவர் வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஊர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த தக்கலை காவல்துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று வீடுகளிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தனர்.
இந்தக் காட்சிகளில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதன் விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க , நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடி ஒன்றில் மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறி மக்கள் ஒருவரைப் பிடித்துத் தக்கலைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளிலிருந்த மர்ம நபரும், மக்கள் பிடித்து வந்த நபரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது ;

முதலில் பகல் நேரத்தில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அங்கு நகையோ பணமோ கிடைக்காத நிலையில் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்தேன்.

ALSO READ:  ‘பகுதிநேர பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்’: அண்ணாமலை கொடுத்த அடைமொழி!

அதன் பின்னர் மீண்டும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது என்னைப் பார்த்த மக்கள் சத்தம் போடவே, அவர்களிடம் நான் ஒரு கொரோனா நோயாளி எனக் கூறி தப்பிச் சென்றேன்.

அதன் பின்னரும் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்த நான் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள சங்கர் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இறங்கினேன். ஆனால் அங்கும் எதுவும் கிடைக்க வில்லை.

ஆனால் அவரது வீட்டில் சமைத்து வைத்திருந்த மீன் குழம்பும் சாப்பாடும் இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட மொட்டை மாடிக்குச் சென்று, நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டேன்.

விடிவதற்குள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த நான் குறட்டை விட்டு நன்றாகத் தூங்கி விட்டேன். எனது குறட்டைச் சத்தம் கேட்டு என்னை மக்கள் பிடித்து விட்டனர் என்று கூறினார். வழக்குப் பதிவு செய்த தக்கலை காவல்துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  உங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை; ஏழைகளுக்கு ஒரு கொள்கையா? சம கல்வி நம் உரிமை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories