February 23, 2026, 12:09 AM
26.7 C
Chennai

சுபாஷிதம்: நிதானமே பிரதானம்!

subhashitam_1-4
subhashitam_1-4

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

93. நிதானமே பிரதானம்!

ஸ்லோகம்:

சஹசா விததீத ந க்ரியாம் அவிவேக: பரமாபதாம் பதம் |
வ்ருணதே ஹி விம்ருஸ்யகாரிணம் குணலுப்தா: ஸ்வயமேவ சம்பத: ||
– கிராதார்ஜுனீயம் – பாரவி.

பொருள்: 

அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யக்கூடாது. விவேகமின்மையே அனைத்து ஆபத்துகளுக்கும் காரணம். ஜஸ்வர்யங்கள் அனைத்தும் நற்குணமுள்ளவனையே வந்தடையும். யோசித்து, திட்டமிட்டு செயல்படுபவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.

விளக்கம்:

திட்டமிட்டு செயல் புரி என்று போதிக்கும் புகழ்பெற்ற சுலோகம் இது. கிராதார்ஜுனீயத்தில் மகாகவி பாரவி கூறுவது.

தர்மபுத்திரன் கூறுவதாக உள்ள இந்த சுபாஷிதம் எல்லா காலத்திற்கும் ஏற்புடையது. யோசித்து முடிவெடுக்கும்படியும் விவேகத்தோடு செயல் புரியும்படியும்  போதிக்கும் ஸ்லோகம் இது.

யோசிக்காமல் அவசரப்பட்டு செய்யும் பணிகள் ஆபத்தில் முடியும். விவேகத்தோடு எது சரி? எது தவறு? என்று ஆய்ந்தறியவேண்டும். விவேகமற்றவனுக்கு சிந்திக்கும் திறன் நின்றுவிடுகிறது. ஆவேசம் அதிகமாகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் ஆபத்தில் முடியும். குழப்பமான சூழ்நிலையில், சமயத்திற்குத் தகுந்தாற்போல் யோசித்து முடிவெடுக்கும் குணம் நம்மை அபாயத்தில் இருந்து காப்பாற்றும்.

அவசரப்பட்டதால் வந்த அனர்த்தங்களுக்கு உதாரணமாக பஞ்ச தந்திரத்தில் உள்ள பாம்பும் கீரிப்பிள்ளையும் கதை புகழ்பெற்றது.

ஒரு குடும்பத்தில் குழந்தையோடு கூட ஒரு கீரிப்பிள்ளையும் அன்பாக வளர்த்து வந்தார்கள். பெற்றோர் வீட்டில் இல்லாத போது குழந்தையின் தொட்டிலை நெருங்கிய பாம்பினைப் பார்த்து கீரிப்பிள்ளை அதனோடு போரிட்டு கொன்றுவிடுகிறது. வாயெங்கும் வழியும் இரத்தக் கறையோடு இருந்த கீரிப்பிள்ளையை பார்த்த தந்தை, தன் குழந்தைக்கு அது தீங்கிழைத்துவிட்டது என்றெண்ணி அந்த கீரிப்பிள்ளையை முன்பின் யோசிக்காமல் அடித்து கொன்று விடுகிறான். உள்ளே வந்து இறந்து கிடந்த பாம்பைப் பார்த்த பின்தான் உண்மை விளங்கிற்று. தன் அவசரச் செயலால் வந்த வினையை எண்ணி புலம்பி அழுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories