குழந்தைகள் கூட விருப்பத்தோடு உண்ணும் வெண்டைக்காய் இப்போது நிறம் மாறி புதிய சிவப்பு வண்ணத்தில் கண்ணுக்கு விருந்து அளிக்கிறது.
நாம் அனைவரும் அறிந்தது பச்சை பசேலென்ற வெண்டைக்காய் களையே. வெண்டைக்காய் பொரியல் அனைவருக்கும் விருப்பமான ஒன்று.
வாரங்கல் அர்பன் மாவட்டம் ஹசன்பர்த்தி மண்டலம் பெம்பர்த்தியைச் சேர்ந்த பிரபாகர் ரெட்டி தன் வயலில் இந்த புதுவித வெண்டைக்காயை பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாய விதத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளதாக விவசாயி குறிப்பிடுகிறார். அறுவடை மிக அதிக அளவு இருப்பதாக விவரிக்கிறார்.
இதன் சத்துக்கள் பற்றி பார்த்தாலும் சிவப்பு வெண்டைக்காயில் சூட்சும போஷக சத்துக்கள் இருப்பதாக வாரங்கல் தோட்டத்துறை அதிகாரி சுத்தால சங்கர் தெரிவிக்கிறார்.
ரத்தக் குறைபாடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சிவப்பு வெண்டைக்காய்களை உணவில் சேர்த்துக்கொண்டால் பயனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.
புழுப் பூச்சிகளின் தொந்தரவு இருக்காது என்பதால் இந்த ரக வெண்டைக்காய்களை விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு விரும்புகிறார்கள். இந்த சிவப்பு வெண்டைப் பயிர் அதிகமாக பெங்களூரு, சிம்லா போன்ற குளிர் பிரதேசங்களில் பயிரிடப்படுவதாக தெரிவிக்கிறார்.