பத்தாண்டுகளாக ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த தாயின் சடலம்! மகளின் செயலால் அதிர்ச்சி!

fridge
fridge

எங்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் சுமார் 10 ஆண்டுகள் தாயின் சடலத்தைப் பெண் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ. உணவு முதல் பார்க்கிங் வரை அனைத்திற்கும் மிக அதிகமாகச் செலவாகும். சிறிய அறை கொண்ட வீடே பல கோடி வரை விற்பனையாகும்.

இதன் காரணமாக அந்நாட்டிலுள்ள பெரும்பாலான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய மக்கள் அரசின் குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். அவ்வாறு டோக்கியோ நகரிலுள்ள அரசின் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ.

இவர் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்பதால் அரசின் குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அவரது அப்பார்ட்மென்ட்டை சுத்தம் செய்ய க்ளீனர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது ப்ரிட்ஜை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ப்ரிட்ஜை திறந்ததும் பல ஆண்டுகளாக அதிலிருந்த சடலம் மெல்ல க்ளீனர் மீது சாய தொடங்கியது. இதனால் ஆடிப்போன அவர், அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டார். பின் இது குறித்துக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ப்ரிட்ஜில் இருந்த சடலம் யூமி யோஷினோவின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டது.

தனது தாயாரின் பெயரிலேயே அப்பார்ட்மென்ட் இருந்ததாகவும், எங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தால், அப்பார்ட்மென்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 10 ஆண்டுகளாகச் சடலத்தை ப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்ததாக யூமி யோஷினோ கூறியதைக் கேட்டதும் காவல் துறையினர் ஆடிப்போய்விட்டனர்.

பல ஆண்டுகளாக ப்ரிட்ஜில் இருந்ததால், உடற்கூறாய்வு யூமி யோஷினோவின் தாய் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உயிரிழந்தபோது அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories