ஆணுறை போன்றது முககவசம்! அறிவுறுத்தும் மருத்துவ நிபுணர்கள்!

face-mask-1
face-mask-1

இந்தியாவில் கொரோனா பரவல் உக்கிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

மிகவும் கோரமாக தாக்கி வருவதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

ஏற்கெனவே நாடு தழுவிய ஊரடங்கால் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இச்சூழலில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு தீர்வாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கினால் நாட்டின் வளர்ச்சி எப்படி வளரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுவது

புகழ்பெற்ற தடுப்பூசி ஆய்வாளர் தெக்கேகரா ஜேக்கப் ஜான் ஹெச்ஐவி தொற்றையும் கொரோனா தொற்றையும் ஒப்பிட்டு இதற்கான விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஹெச்ஐவி தொற்று வந்தால் என்ன செய்தோம்? உடலுறவே வைக்கக் கூடாது என்று சொல்வோமா? அல்லது பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வோமா? அதாவது ஆணுறையுடன் கூடிய உடலுறவை சொல்கிறேன். மக்கள் நிறைய தூண்டுதல்களுக்குப் பிறகு ஆணுறை அணிந்தனர். அதேபோல கொரோனாவை தடுக்க முகக்கவசம் ஒன்றே தீர்வு. ஊரடங்கு ஒரு தீர்வல்ல.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது ஊரடங்கு போடப்பட்டதிலேயே எனக்கு உடன்பாடு இல்லை. மக்களைத் தனிமைப்படுத்தினால் மனநல பிரச்சினை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகத்துடன் உறவாடாமல் மனிதனால் வாழ முடியாது. மக்களால் பின்பற்ற முடியாத ஊரடங்கு நடைமுறையை நாம் ஏன் கையில் எடுக்க வேண்டும். அதை விடுத்து முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமே” என்றார்.

பேராசிரியரும் நுண்ணுயிரியல் துறை நிபுணருமான வசந்தபுரம் ரவி கூறுகையில், “நாடு தழுவிய முழு ஊரடங்கு என்பது நிரந்தர தீர்வல்ல.

அது நடைமுறைக்கு ஆகாத காரியம். நாம் அழுத்தம் கொடுப்பதால் மக்களின் பழக்கவழக்கங்கள் மாறாது. ஹெச்ஐவி தொற்று அதிகம் இருந்த காலத்தில் மக்கள் ஆணுறை அணிய மறுத்தனர். இப்போது முகக்கவசம் அணிய மறுக்கிறார்கள். மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களிடம் உடலுறவே வைக்க கூடாது என சொல்வதைக் காட்டிலும் ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு கொள்ளுங்கள் என்று சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

அதுபோல முகக்கவசம் அணிவதையும் வலியுறுத்த வேண்டும். தொற்று பரவலைக் குறைக்க தேவையான கட்டுப்பாடுகள் அவசியம் தான். ஏனென்றால் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனம் வேகத்தடை வரும்போது மெதுவாகச் செல்லும். அதேபோல சில கட்டுப்பாடுகளை விதித்தால் பரவலின் வேகம் குறையலாம். மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு” என்றார்.

மற்றொரு நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளரான ராமசாமி பிச்சையப்பன் பேசுகையில், “கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற பழக்கவழக்கங்களை மக்களிடம் வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து ஊரடங்கு போடுவது தொற்று பரவலைத் தடுக்காது. இருப்பினும், காரணத்துடன் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஊரடங்கு என்பது பொருளாதாரத்திற்கு பேரழிவாக அமையும். பொருளாதாரத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories