டி20: குரூப் ஏ- அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டி – 07.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஞாயிறன்று இரண்டு குரூப் 2 பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே அபுதாபியில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடைபெற்றது.

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி பூவாதலையா வென்று முதலில் மட்டையாட முடிவு செய்தது. முதல் ஆறு ஓவர்களான, பவர்ப்ளேயில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 23 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நஜீபுல்லா சத்ரன் என்ற ஆப்கானிஸ்தான் வீரர் மட்டும் சிறப்பாக ஆடினார். அவர் 48 பந்துகளில், 3 சிக்சர், 6 ஃபோர்களுடன் 73 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. எனவே ஆப்கானிஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 124 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் போதும்; அரையிறுதிக்குச் செல்லலாம் என்பதால் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி 18.1 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எனவே நாளை நமீபியா அணியுடன் இந்திய அணி விளையாடப் போகும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. குரூப் 2 பிரிவிலிருந்து அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மட்டுமே.

பாகிஸ்தான் – ஸ்காட்லாந்து

பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. முதலில் மிக மெதுவாக ஆடிய அந்த அணி வீரர்கள் பின்னர் புயலைப் போல ஆடினார்கள். அந்த அணி வீரர்கள் முதல் 50 ரன் எடுக்க 49 பந்துகள் எடுத்துக் கொண்டார்கள்; அடுத்த 50 ரன் எடுக்க 37 பந்துகள்; அதற்கடுத்த 50 ரன் எடுக்க 25 பந்துகள்; அடுத்த 39 ரன் எடுக்க 9 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டனர். அந்த அணியின் ஷோயப் மலிக் 18 பந்துகளில் ஆறு சிக்ஸ், ஒரு ஃபோருடன் 54 ரன் எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது.

இந்த கடினமான இலக்கை அடைய ஸ்காட்லாந்து அணி மிகவும் தடுமாறியது, அந்த அணியின் ரன்ரேட் எப்போதும் பாகிஸ்தான் அனியின் ரன்ரேட்டைவிட குறைவாகவே இருந்தது. அந்த அணியின் ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் சிறப்பாக ஆடி 54 ரன் எடுத்தார். எனவே ஸ்காட்லாந்து அணி இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 117 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது.
நாளை நடைபெறப்போகின்ற குரூப் 2 பிரிவு ஆட்டமான இந்தியா-நமீபியா ஆட்டத்தினால் எந்த முக்கியத்துவமும் இல்லை.

அரையிறுதி ஆட்டங்களில் ஆடும் அணிகள் முடிவாகிவிட்டன. முதல் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 10ஆம் தேதி அபுதாபியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே துபாயில் நவம்பர் 11இல் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories