spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉங்கள் உடலில் ‘ஒரிஜினல்’ தமிழின ரத்தம் ஓடுவது உறுதியென்றால்... இதை பகிருங்கள்!

உங்கள் உடலில் ‘ஒரிஜினல்’ தமிழின ரத்தம் ஓடுவது உறுதியென்றால்… இதை பகிருங்கள்!

- Advertisement -

தேர்தல் நேரத்தில் மக்களிடம் மாற்றிப் பேசினால், அதனை மக்கள் நம்பிக் கொண்டு ஓட்டு போடுவார்கள் என்பது திராவிட அரசியல்வாதிகளின் பார்வையாக இருக்கிறது. அதில், அதிமுக., பாமக., என்று மட்டும் இல்லை… திமுக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியுமே ஒவ்வொருவரையும் பின் தள்ளிக் கொண்டு பொய்களை அள்ளி வீசுவதில் முதலிடம் பிடிக்க முந்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர், இலங்கை அரசியல் என்று தமிழகத்தை கலவரக் காடாக மாற்றி, மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசை எதிர்த்து நாளொரு போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், திமுக., எல்லாமே இன்று காங்கிரஸுடன் கைகோத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கின்றன.

ஈழத் தமிழர்களை நயவஞ்சகத்தால் கொலை செய்த கொலைகாரர்கள் என்று திமுக.,வை, கருணாநிதியை, ஸ்டாலினை குற்றம் சாட்டிக் கொண்டிருந்த வைகோ, இனி  விடுதலைப் புலிகளும் இல்லை, ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினால் வருமானமும் இல்லை, கட்சியையும் நடத்த முடியாது என்று ஒரேயடியாக கருணாநிதியின் காலிலேயே போய் விழுந்தார்.  இன்று ஸ்டாலினுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தவரை ஈழக் குரல் ஒலித்த திராவிட அரசியல் கட்சிகளின் குரல்கள் 2010க்குப் பின்னர் மாறி ஒலிக்கத் தொடங்கின. அவர்களுக்கு இனி ஈழமும் பிரபாகரனும் தேவைப்படவில்லை. காங்கிரஸும் அதிகாரமுமே தேவைப்பட்டது. அதன் பின்னரே திமுக., ஊழல் மேல் ஊழலாகச் செய்து, கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியது.

அதன் பின்னர் சுருட்டிய பணத்தை பாதுகாக்க, வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, மீண்டும் காங்கிரஸ் காலடியிலேயே விழுந்தது. விழுந்து கிடக்கிறது. இந்தக் கூட்டுக் கொள்ளைக் கொள்கையின் காரணத்தால்தான், இப்போதும் திமுக., தனது கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளைக் கொடுத்தது.

இவ்வளவு துரோகங்களையும் ஈழத் தமிழனுக்கு இழைத்த திராவிட இயக்கக் கூட்டம், இப்போது ஈழத்தைப் பற்றி பேச்சே எடுப்பதில்லை! சொல்லப் போனால், ஈழத் தமிழர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த திமுக., ராஜீவ் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாய் விடுதலைப் புலிகளையும் கூடவே ஈழத் தமிழர்களையும் சோனியா என்ற கிறிஸ்துவ கொடூரக் கரங்களின் பின்னணியில் கொன்று குவிக்க, நம்பிக்கைத் துரோகம் செய்தது!

ஆனால், தமிழக அரசியல் களத்தில் பலிகடாவாக்கப் படும் பாஜக., ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை காட்டி வருகிறது. அந்தக் கட்சிக்கு இவர்கள் சூட்டிய பட்டம், தமிழின விரோதிகள் என்பது!

யார் தமிழின விரோதி??? தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது… அந்த இறுதி யுத்தம் நடந்தபோது… மத்தியில் காங்கிரஸ் அல்லாத பாஜக அரசு அமைந்தால், தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று பிரபாகரன் கடைசி நம்பிக்கை கொண்டு போரை இழுத்தடித்து சர்வதேச ஆதரவையும் கவனத்தையும் திருப்ப முற்பட்டபோது…. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து… தேர்தல் முடிவை திமுக மாற்றியமைத்து!

மத்தியில் மீண்டும் காங்கிரஸைக் கொண்டு வந்து… பழிவாங்கினார்களே…. அவர்கள் தமிழர் நட்பாளர்கள்… தொப்புள்கொடி உறவெனச்சொல்லி சங்கறுத்த துரோகிகள் இவர்கள்! 

இன்று அதே ராஜபட்சவை தோற்கடித்து… தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய வர்கள்… மோடியை முன்னிறுத்தி இயக்கிய ஆர்எஸ்எஸ்., காரர்கள்! காரணம், இலங்கையில் போரை நடத்தி, தமிழர்களையும் தமிழ்க் கலாசாரத்தையும் முற்றாக அழிக்க சதி திட்டம் தீட்டியவர்கள், இலங்கை முஸ்லிம்களும், கிறிஸ்துவ அமைப்புகளும்!

இலங்கைத் தமிழர்களின் சைவநெறியை, இந்துக் கலாசாரத்தை முற்றாக ஒழிக்க அவர்கள் தீட்டிய திட்டத்துக்கு ஆதரவாக இருந்து லட்சக் கணக்கில் தமிழர்களைக் கொலை செய்ய உதவியவர்கள் நாத்திகர்களான திமுக.,வும் கிறிஸ்துவ மதசார்புக் கட்சியான காங்கிரஸும். ஆனால், இலங்கைத் தமிழர்களின் சைவ நெறி வாழவும், பாரம்பரிய மதப் பழக்கங்கள் அழிந்து போகாமல் காக்கவும் முன்னெடுத்தது பாஜக., தலைமையிலான மோடியின் அரசு!

எந்த ராஜபட்சவை கொலைக் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என ஐ.நா. வரை போர்க் கொடி தூக்கினார்களோ, அந்த ராஜபட்சவிடம் சிரித்துக் கொண்டே பரிசுகளும் பணமும் பெற்ற திருமாவளவன், கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன் என இவர்களை தமிழ் உணர்வாளர்கள் மன்னிக்க மாட்டார்கள்! மறக்கவும் மாட்டார்கள்!

ரஜினி கடந்த வருடம் ஒரு கலை நிகழ்ச்சிக்கு இலங்கை செல்ல முடிவு செய்த போது அதற்கு அதிதீவிர எதிர்ப்பைக் காட்டியவர்கள், இன்று இலங்கையில் பெரும் முதலீடே செய்து, வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திமுக., பாரம்பரியம்தான் ஜகத்ரட்சகன் மேற்கொண்டுள்ள முதலீடுகள்!

[videopress 6daxqDLI]

ஆனால்… மோடி தலைமையிலான இந்திய அரசோ… இலங்கையில் தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று பெரு முயற்சி எடுத்தது. பிரதமராக மோடி தேர்வான பின்னர் இலங்கைக்கு முதல் முதலாக அவர் சென்ற போது ஏற்பட்ட எழுச்சியும், அவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிர்ணயிக்கப் பட்ட மூன்றே ஆண்டுகளில் செய்து முடித்ததையும்… இந்த இரு செய்திகள் வெளிப்படுத்தும்…

14.03.2015 இல் வெளியான செய்தியில்….

நம்பிக்கை அளித்த மோடியின் யாழ். பயணம்: நூலகத்துக்கு நூல்கள் வழங்க உறுதி

யாழ்ப்பாணம்: இலங்கையில் அனைத்து மக்களும் சம வாய்ப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

கொழும்புவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வந்தார். அப்போது, முன்னர் சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட மோடி, யாழ். நூலகம் மீண்டும் சிறப்பைப் பெற தேவையான நூல்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் சென்ற மோடி, அங்கே மதவாச்சி-தலைமன்னார் இடையிலான புதிய ரயில் பாதையைத் துவக்கிவைத்தார். இந்த ரயில் பாதையை இந்தியன் ரயில்வே அமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த ஆகியவற்றை விளக்கி, பிரதமர் மோடியிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலத்துக்குப் பின்னர் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், யாழ்ப்பாணம் வந்த மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கே யாழ். பொது நூலகம் அருகே அமையவுள்ள கலாச்சார நிலைய தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்: தமிழில் டிவிட்டிய மோடி

தமிழக மீனவர் பிரச்னை: இலங்கையில் மோடி எழுப்பியதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

இலங்கைக்கு மோடி செல்லும்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: எச்.ராஜா

யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பொங்கப்பட்ட பொங்கல் பானையில் என்னவெல்லாம் போட்டீர்கள் என்று கேட்டபடி….

பின்னர் இந்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டத்தை பார்வையிட்டு, வீடிழந்தவர்கள், ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார். இந்திய அரசின் சார்பில் யாழ்பாணத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 27,000 வீடுகளை வழங்கிய மோடி, “இது மிகவும் அருமையான திட்டம். இது போன்ற திட்டம் குஜராத்தில் 2001ம் ஆண்டு பூகம்பத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 27,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 27,000 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சி.

இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்… என்றார் மோடி.

முன்னதாக, தனது பேச்சின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் துவக்கினார். அது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய மோடி, இன்னும் அதிக அளவில் இந்திய அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசின் உறுதியையும் எடுத்துரைத்தார்.

கொழும்பு திரும்பும் முன்னர், தமிழர் பிரதிநிதிகள், முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள், இந்திய வம்சாவளி தலைவர்கள் என பலரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இது குறித்து தங்களது மகிழ்ச்சியை பிரேமசந்திரன் வெளிப்படுத்தினார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தம்முடன் பேசிய மோடி, தங்களின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பொறுமையாகக் கேட்டதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்தார். மோடியின் பயணம் தங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

***
இது 2018 ஆக.13ம் தேதி வெளியான செய்தி:

இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

கடந்த 2018ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை தில்லியில் இருந்த படியே காணொளிக் காட்சி வாயிலாக அர்ப்பணித்து, அவர்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு… இலங்கையில் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2,418 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஏறக்குறைய 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 404 வீடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, நுவாரா எலியா நகரில் நடைபெற்றது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதர் தரண்ஜித் சிஹ் சாந்து, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், நவீன் திசநாயகே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்!

தில்லியில் இருந்து காணொலி காட்சி முறையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் கூறுகையில், “அண்டை நாடுகளுடனான நட்புறவில் இலங்கைக்கு சிறப்பான இடத்தை இந்தியா எப்போதும் அளிக்கும். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீங்கள் இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறீர்கள். இலங்கை தமிழர்களுக்காக மேலும் 10ஆயிரம் வீடுகளை கட்டித்தரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிலத்தையும் இலங்கை அரசு தேர்வு செய்துள்ளது’ என்றார்.

ரணில் விக்ரமசிங்க கூறுகையில், “கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கை தலைநகர் கொழும்புவையும், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியையும் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் மோடியின் யோசனையையும் வரவேற்கிறேன்’ என்றார்.

கொழும்பு-வாராணசி இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.
***

ஈழத் தமிழர்களுக்கு முந்தைய காங்கிரஸ் திமுக., கூட்டணி அரசு செய்த அழிவுகளின் கறைகளைத் துடைப்பதற்கு, தமிழர்களை வாழ வைக்க திட்டங்கள் போட்டு, அரசு ரீதியில் அரவணைத்துச் செல்ல நினைக்கும் மோடியை தமிழர் துரோகி என்றும், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களவருடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டு, ஊழல் முறைகேடு, லஞ்சத்தில் திளைத்து மேலும் மேலும் சொத்துகளைக் குவிக்க நினைக்கும் திமுக.,வினரை தமிழரினக் கட்சி என்றும் கொண்டாடும் முட்டாள் தமிழர்கள், இந்தத் தமிழ்நாட்டில் தான் இருப்பார்கள்.

காரணம், அவர்களின் மூளையை மழுங்கடிக்கத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேய கிறிஸ்துவனிடம் கோடி கோடியாய் பணம் பெற்றுக் கொண்ட கன்னடன் ஈ.வே.ராமசாமி நாயக்கனும், தன் குடும்ப வாரிசுகளை வளர்த்தெடுக்க தமிழர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய தெலுங்கன் கருணாநிதியும் முயற்சிகளை மேற்கொண்டுவிட்டார்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe