நினைத்தது நடேந்தேற ராகுகால பூஜை..!

raahu kethu - 2026

செவ்வாய்க் கிழமை ராகுகால பூஜை… இது! எந்த ஒரு செயலையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கினால் அந்த வேலை இனிதே நடந்து நற்பலன்கள் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

சித்த யோகம், அமிர்தயோகம், என மங்களங்கள் தரும் வெள்ளிக்கிழமை, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கிழமைகளை புகழ்வார்கள். ஆனால் ராகு காலத்தை நினைத்தால் மிகுந்த அச்சம் கொள்வர். உண்மையில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் உண்டாகும் பலன்களுக்கு எல்லையே இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறலாம்.

ராகு ஒரு ராசியில் ஒன்றரை (11/2)வருட ங்கள் தங்குவார் இதே போல் ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகக் கூறப்படுகிறது. ராகு காலம் அமிர்தகாலம் என்று சொல்லப்படுகிறது.

அமிர்தம் அருந்தியவர்களுக்கு எப்படி பூரண ஆயுள் உண்டாகுமோ அது போல் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கு புண்ணியம் பெருகும். ராகு பூஜையை திருமணத் தடைக்குறியபூஜையாகப் பார்க்காமல் மற்ற துன்பங்களை நீக்கும் பூஜை யாகவும் செய்யலாம் .

ராகு கால அஷ்டமி பூஜை 

இந்த பூஜையைச் செய்வதால் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சுகங்களையும் பெறலாம். வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் பூஜையை ஆரம்பித்து, தொடர்ந்து ஒன்பது அல்லது பதினாறு அஷ்டமிகள் செய்ய வேண்டும்.

முடிந்த அளவு ஏதேனும் நீர் நிலைகளில் குளித்து விட்டு , தீர்த்தம் எடுத்து வந்து அதனை பூஜையறையில் வைத்து வணங்கி ராகு காலம் முடிந்தவுடன் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளோர் மேலும் வீடு மொழுகவும் தெளிக்கவும், தேங்காய் வெற்றிலை, பாக்கு அவல், பொரி, புளிசாதம்., தயிர்சாதம் போன்ற ஏதேனும் கலவை சாதம், சுண்டல் ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை பூஜையில் சமர்ப்பித்து வணங்கலாம்.

இப்பூஜையின் மூலம் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகங்களும் எவ்விதத் தடங்கலுமின்றிக் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை 

செவ்வாய்க்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் இப்பூஜையைச் செய்ய வேண்டும் திருமணத் தடை மட்டுமின்றி வறுமையைத் தீர்க்கவும் இந்தப் பூஜையைச் செய்யலாம். செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள். ராகு தசை நடப்பவர்கள், ராகு எட்டாம் இடத்தில் இருந்து தசை நடப்பவர்கள், வெகுக் கஷ்டம் அனுபவிப்பவர்கள் எல்லாரும் இந்த பூஜையைச் செய்யலாம் . விரதமிருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பூஜை முடிந்த பின்பே உணவு உண்ண வேண்டும்.

துர்க்கை சந்நதியில் எலுமிச்சை பழத்தில் நல்ல எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றவும். தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை முதலிய ஏதாவது ஒன்றை நிவேதனம் செய்யலாம். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது நலம். துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றுவதும் நலம் தரும். துர்க்கைக்கு மஞ்சள் நிறப் பூக்கள் பூஜைக்கு ஏற்றது.

அரளி பூ மாலை சாற்றுவது அல்லது அரளி பூ கொண்டு அர்ச்சனை செய்வதும்,உகந்தது. துர்க்கை சம்பந்தமான துதிகளைப் பாராயணம் செய்யலாம் . பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ மாங்கல்ய தோஷமோ இருப்பின், இப்பூஜையைச் செய்து வர கணவரின் ஆயுள் விருத்தியாகும்.

புத்திர தேராஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம் ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,
ராஜஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 9843710327

ராகு இந்த கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்… இந்த பூஜையை செய்ங்க.. பிறகு பாருங்க…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories