கல்வி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

மே 2 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்; விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். 

10ம் வகுப்பு கணித தேர்வு ரொம்ப கஷ்டமாம்! கவலையில் ஆசிரியர்கள்!

இன்று அதிகப்படியான மாணவ மாணவிகள் தேர்வு எழுதி விட்டு வெளியே வரும் போது கண்ணீருடன்தான் வந்தனராம்.

ஒன்றாம் வகுப்புக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது

ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மாறுகிறது மாணவர்களின் சீருடை: பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 
- 2026

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை: தடுப்பது எப்படி?

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட இரு வழிகள் தான் உள்ளன. முதலாவது கல்வியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்குவது. அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தலாம் . இரண்டாவது...

நல்லவேளை..! சிபிஎஸ்இ கணிதம் மறு தேர்வு இல்லை… பெருமூச்சு விடும் மாணவர்கள்!

புதுதில்லி: கடந்த மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்தது.

நீட்.,க்கு எதிரான பிரசாரம்… ஏன் செய்கிறது எஸ்.ஆர்.எம்.மின் ‘புதிய தலைமுறை’?

மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் (BDS உட்பட) போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.

நெல்லை பல்வேறு இடங்களில் திருட்டு கல்லூரி மாணவர்கள் கைது

பாவூர்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாவூர்சத்திரம் வட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் சமீப...

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

வினாத்தாள் வாட்ஸ்அப்பில் லீக் ஆன சர்ச்சை: 2 தாள்களுக்கு மறு தேர்வு என சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles