
காஜூ கத்லி
தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்பு – 1 கப்,
சர்க்கரைத் தூள் – 1 கப்,
ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்,
சில்வர் பேப்பர் – அலங்கரிக்க,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.

மற்றொரு முறை
முந்திரிப் பருப்பை உலர வைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பாகுப் பதத்துக்கு காய்ச்சவும். அதில் முந்திரிப் பொடியை கொட்டி, கிளறி இறக்கவும். எசென்ஸ் சேர்த்து சூடாக இறக்கியப் பின் கிளறி, தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறியதும் துண்டுகள் போடலாம். சுலபமாக செய்யலாம் இந்த கத்லி.



