December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகப்பரு, முடக்கு வாதம், முகப்பொலிவு, மூளைச்சோர்வு..!

health tips 1
health tips 1

முகப்பருவுக்கு…

சுத்தமான மெழுகைப் பொடி செய்து அதில் கொஞ்சம் வெண்ணெயும், கிளிசரினும் விட்டு நன்றாகக் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இக்கலவையை இளஞ்சூட்டோடு எடுத்து இரவில் பருக்களின் மீது பூச விடிந்ததும் பரு மறைந்தே போகும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை பருக்களின் மீது தடவி வர
சில நாள்களில் பருக்கள் மறையும்.

மலச்சிக்கல் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதைப் போக்க எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நீரும் உப்பும் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கி முகப்பரு மறையும். எலுமிச்சம் சாற்றை பருக்களின் மீது தடவியும் வரலாம்.

புளியாரைக் கீரையை பன்னீர் விட்டு நன்கு மை போல் அரைத்து
முகப்பரு, கொப்புளங்கள். தீப்புண்கள் மீது பூச அவை நீங்கும்.

முடக்கு வாதத்துக்கு…

வயிற்று உப்புசம், வயிற்று வலி, முடக்கு வாதம், நாக்குப் பூச்சி இவை நீங்க நொச்சியிலையையும் மிளகையும் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிடலாம். நொச்சி இலையை நசுக்கித் தலையில் வைத்துக் கட்ட தலைபாரம் உடல் நோவு தீரும்.

முழங்கால் வாதம், கணுவாதம் இவற்றுக்கு வேப்பிலை, வேலிப் பருத்தி இரண்டையும் சமமாக அரைத்துப் பற்றுப்போட இரண்டு மூன்று நாள்களில் வலி நீங்கி சுகம் ஏற்படும்.

வாரத்திற்கு இரு முறை முருங்கைக் காயை உணவில் சேர்த்து வர குடல் வலுப்பெறும். வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும். கபத்தை ஒழிக்கும். இரத்தமும் சிறுநீரும் சுத்தியடையும். பூட்டு வலியைப் போக்கும்.

முகப்பொலிவுக்கு…

ஆவாரம் பூவை உலர்த்தி தூள் செய்து, கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் முகம் கழுவ முகப் பொலிவுடன் சுருக்கமும் விழாது.

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? பச்சைப் பயிறை தோலுடன் அரைத்து நீரில் குழைத்து முகத்தில் நன்றாய்த் தடவிக் கால் மணி நேரம் ஊறிக் குளிக்கலாம்.

மூளைச் சோர்வு நீங்க…

கல்யாணப் பூசணி சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது தேவையான அளவு கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து சாப்பிட அதிமோகத்தாலுண்டான தளர்ச்சியைப் போக்கும். மூளைச் சோர்வும் அசதியுமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும்.

அடிக்கடி வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட மூளைக்கு பலம் தருவதுடன் இரத்தவிருத்தியும் ஏற்படும். சிறுநீரை தாராளமாக இறங்கச் செய்யும்.

தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவில் பருப்புடன் சேர்த்து சாப்பிட மூளை நரம்புகள் பலமடையும். கபம் நீங்கும்.

பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட மூளை நரம்புகள் நல்ல வலுவடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories