அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகப்பரு, முடக்கு வாதம், முகப்பொலிவு, மூளைச்சோர்வு..!

health tips 1
health tips 1

முகப்பருவுக்கு…

சுத்தமான மெழுகைப் பொடி செய்து அதில் கொஞ்சம் வெண்ணெயும், கிளிசரினும் விட்டு நன்றாகக் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இக்கலவையை இளஞ்சூட்டோடு எடுத்து இரவில் பருக்களின் மீது பூச விடிந்ததும் பரு மறைந்தே போகும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை பருக்களின் மீது தடவி வர
சில நாள்களில் பருக்கள் மறையும்.

மலச்சிக்கல் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதைப் போக்க எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நீரும் உப்பும் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கி முகப்பரு மறையும். எலுமிச்சம் சாற்றை பருக்களின் மீது தடவியும் வரலாம்.

புளியாரைக் கீரையை பன்னீர் விட்டு நன்கு மை போல் அரைத்து
முகப்பரு, கொப்புளங்கள். தீப்புண்கள் மீது பூச அவை நீங்கும்.

முடக்கு வாதத்துக்கு…

வயிற்று உப்புசம், வயிற்று வலி, முடக்கு வாதம், நாக்குப் பூச்சி இவை நீங்க நொச்சியிலையையும் மிளகையும் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிடலாம். நொச்சி இலையை நசுக்கித் தலையில் வைத்துக் கட்ட தலைபாரம் உடல் நோவு தீரும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

முழங்கால் வாதம், கணுவாதம் இவற்றுக்கு வேப்பிலை, வேலிப் பருத்தி இரண்டையும் சமமாக அரைத்துப் பற்றுப்போட இரண்டு மூன்று நாள்களில் வலி நீங்கி சுகம் ஏற்படும்.

வாரத்திற்கு இரு முறை முருங்கைக் காயை உணவில் சேர்த்து வர குடல் வலுப்பெறும். வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும். கபத்தை ஒழிக்கும். இரத்தமும் சிறுநீரும் சுத்தியடையும். பூட்டு வலியைப் போக்கும்.

முகப்பொலிவுக்கு…

ஆவாரம் பூவை உலர்த்தி தூள் செய்து, கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் முகம் கழுவ முகப் பொலிவுடன் சுருக்கமும் விழாது.

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? பச்சைப் பயிறை தோலுடன் அரைத்து நீரில் குழைத்து முகத்தில் நன்றாய்த் தடவிக் கால் மணி நேரம் ஊறிக் குளிக்கலாம்.

மூளைச் சோர்வு நீங்க…

கல்யாணப் பூசணி சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது தேவையான அளவு கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து சாப்பிட அதிமோகத்தாலுண்டான தளர்ச்சியைப் போக்கும். மூளைச் சோர்வும் அசதியுமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

அடிக்கடி வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட மூளைக்கு பலம் தருவதுடன் இரத்தவிருத்தியும் ஏற்படும். சிறுநீரை தாராளமாக இறங்கச் செய்யும்.

தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவில் பருப்புடன் சேர்த்து சாப்பிட மூளை நரம்புகள் பலமடையும். கபம் நீங்கும்.

பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட மூளை நரம்புகள் நல்ல வலுவடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories