அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வாந்தி, அக்கி, வாய்க்கசப்பு, அடிப்பட்ட காயம், வயிற்று உப்புசம்..! ‌

Published:

health tips 1
health tips 1

வாந்தி நிற்க…

சீரகத்தூள் மூன்று சிட்டிகை, திப்பிலித் தூள் மூன்று சிட்டிகை. மயிலிறகின் தூள் மூன்று சிட்டிகை எடுத்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட வாந்தி நிற்கும்.

வெங்காயத்தை மென்று விழுங்கி அதையே முகர்ந்து கொண்டி ருந்தாலும் வாந்தி நிற்கும்.

அக்கி குணமாக…

மணத்தக்காளி செடியின் இலையைத் தட்டி சாறெடுத்து அதைப் பூ வர அக்கி காய்ந்து குணமாகும். அக்கி தோன்றியவுடன் கடைகளில் கிடைக்கும் பூங்காவியை தண்ணீரில் கலந்து பூசி வந்தால் காய்த் ஆறிவிடும்.

வாய்க் கசப்பு சரியாக…

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம் பழ சாற்றில் ஊற வைத்து பிறகு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து. கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வர சில நாள்களில் வாய்க்கசப்ப சரியாகி விடும்.

முப்பது கிராம் சீரகத்தை ஒரு கோப்பையில் இட்டு அது முழுகுட படியாக எலுமிச்சம்பழச் சாறு விட்டு வெயிலில் காய வைத்து சாலு கண்டிய பிறகு பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு காை எழுந்தவுடன் அரை ஸ்பூன் மென்று தின்று தண்ணீர் குடிக்க ஒடு வாரத்தில் பித்தக் கசப்பு சரியாகிவிடும்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அடிபட்ட காயம் சரியாக…

மூக்கிரட்டை இலையை அரைத்து காயத்தில் வைத்துக் கட்டிவ பிளந்த காயம் கூட நன்றாகத் சேர்ந்து ஆறிவிடும்.

உப்பு. மிளகாய் சம அளவு எடுத்து தூள் செய்து சிறிது வேப்பென் ணெய் விட்டு வதக்கி அதை வைத்து கட்டி வந்தாலும் அடிபட்ட காயட் புண் சரியாகி விடும்.

வயிற்று உப்புசம் நீங்க…

ஒரு பிடி முருங்கைக் கீரையை சுத்தம் செய்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து அதில் அரை ஸ்பூன் சாப்பிட உப்புசம் உடனே குணமாகி விடும்.

Related articles

Recent articles

spot_img