கேரட் சாதம்
தேவையான பொருட்கள் :
கேரட் – கால் கிலோ
பாஸ்மதி ரைஸ் -அரை கிலோ
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
புதினா – ஒரு கைப்பிடி
பாதாம் – 4
முந்திரி – 4
காய்ந்த மிளகாய் – 3
நெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை :
முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர; ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொடிந்ததும் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.
கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும். அரிசி மூழ்கும் அளவுக்கு சாறு இருந்தால் போதும், அதற்கேற்ப சாறெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தலை தூவினால் கேரட் சாதம் ரெடி.
For Carrot Pulao, instead of extracting the juice from carrots, they can be scraped, sauteed and added to the rice and then cooked together with the other ingredients. Mustard is generally not used in any Pulao.The mint and coriander leaves are added in the end after the rice is cooked.