December 5, 2025, 9:41 PM
26.6 C
Chennai

சந்திரயான்-2 நாட்டு மக்களை ஒன்றிணைத்தது; பிரதமர் மோடி பெருமிதம்!

modi in rothak1 - 2025

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உணர்வு இந்தியா முழுவதும் இப்போது பரவி நிற்கிறது. சந்திராயன் 2 நிலவுக்கான பயணத்திட்டம் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விட்டது. இப்போது தோல்வியோ வெற்றியோ அதையும் கடந்து தொலைநோக்குப் பார்வையுடன் இயங்குகிற உணர்வை இந்தியா பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ரோட்டக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

ரோட்டக் நகரில் பாஜக.,வின் விஜய் சங்கல்ப பேரணி நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி விஜய் சங்கல்ப பேரணி ஞாயிறு அன்று ரோட்டாக் நகரில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவின் சந்திரயான் குறித்தும், அது மக்களவை ஒருங்கிணைத்தது குறித்தும் தனது பேச்சின் இடையே குறிப்பிட்டார்.

அவர் இது குறித்துப் பேசிய போது…

செப்.7ம் தேதி இரவு நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் உணர்வுப் பேரலையாகப் பரவி இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைத்துள்ளது. இந்தியா தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்தியர்கள் ஒருபோதும் எதிர்மறையான பயன்களை, விளைவுகளை அங்கீகரிப்பதில்லை!

modi in rothak3 - 2025

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அந்த 100 வினாடிகளில் இந்தியாவில் என்ன நிகழ்ந்ததோ அது இந்தியாவின் 125 கோடி மக்களின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவின் 120 கோடி மக்களும் சக்தி நிரம்பியவர்களாக நம்பிக்கை நிரம்பியவர்களாக எதிர்காலத்தின் மீது அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு அது எடுத்துக்காட்டு. நான் அதை இஸ்ரோ உணர்வு என்றே குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய உணர்வு உள்ள நாடு ஒன்று தான் தன் தோல்விகளைக் கடந்து வெற்றிகளை உறுதி செய்ய முடியும்.

modi in rothak2 - 2025

இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்திய மக்கள் விரும்புவதை நிறைவேற்றக்கூடிய சக்தியும் திறமையும் இப்பொழுது இந்தியாவில் உள்ளது என்று மக்கள் நம்பத் தொடங்கி உள்ளனர் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories