ஒரே நாடு; ஒரே கார்டு… அமித்ஷாவின் அடுத்த அதிரடி!

amith sha - 2026
New Delhi: BJP President Amit Shah addresses the party’s National Council meet in New Delhi on Saturday. PTI Photo by Shahbaz Khan (PTI8_9_2014_000057B)

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்த தயாராகிவருகிறார். ஏற்கெனவே, அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு தொடர்பில் தீர்மானமான முடிவினை எடுத்து வரும் அமித் ஷா, இது தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவு படுத்தப் படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வங்கிக் கணக்கு என தனித்தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து ஒரே பல்நோக்கு அட்டை வழங்குவது குறித்து ஆராயப் படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியபோது, தற்போது ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஒருவருக்கு பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஒரே அட்டையில் இந்த அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும். இதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஆராயப்படுகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதற்கு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும். மக்கள் தொகை கணக்கு எடுப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது 16 மொழிகளில் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொபைல் ஆப் உருவாக்கப்படும்.

இனி பேனா பேப்பர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களுடைய மொபைல் போனிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும். ஜம்மு காஷ்மீர் மற்றும் பனி மலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் 2021 மார்ச் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களும் பெறப்படும். அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு போன்றது இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு என்றார் அமித் ஷா.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories