ஒரே நாடு; ஒரே கார்டு… அமித்ஷாவின் அடுத்த அதிரடி!

Published:

amith sha - 2026
New Delhi: BJP President Amit Shah addresses the party’s National Council meet in New Delhi on Saturday. PTI Photo by Shahbaz Khan (PTI8_9_2014_000057B)

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்த தயாராகிவருகிறார். ஏற்கெனவே, அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு தொடர்பில் தீர்மானமான முடிவினை எடுத்து வரும் அமித் ஷா, இது தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவு படுத்தப் படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வங்கிக் கணக்கு என தனித்தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து ஒரே பல்நோக்கு அட்டை வழங்குவது குறித்து ஆராயப் படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியபோது, தற்போது ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஒருவருக்கு பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஒரே அட்டையில் இந்த அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும். இதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஆராயப்படுகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இதற்கு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும். மக்கள் தொகை கணக்கு எடுப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது 16 மொழிகளில் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொபைல் ஆப் உருவாக்கப்படும்.

இனி பேனா பேப்பர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களுடைய மொபைல் போனிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும். ஜம்மு காஷ்மீர் மற்றும் பனி மலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் 2021 மார்ச் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களும் பெறப்படும். அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு போன்றது இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு என்றார் அமித் ஷா.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img