ஒரே நாடு; ஒரே கார்டு… அமித்ஷாவின் அடுத்த அதிரடி!

amith sha - 2026
New Delhi: BJP President Amit Shah addresses the party’s National Council meet in New Delhi on Saturday. PTI Photo by Shahbaz Khan (PTI8_9_2014_000057B)

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்த தயாராகிவருகிறார். ஏற்கெனவே, அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு தொடர்பில் தீர்மானமான முடிவினை எடுத்து வரும் அமித் ஷா, இது தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவு படுத்தப் படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வங்கிக் கணக்கு என தனித்தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து ஒரே பல்நோக்கு அட்டை வழங்குவது குறித்து ஆராயப் படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியபோது, தற்போது ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஒருவருக்கு பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஒரே அட்டையில் இந்த அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும். இதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஆராயப்படுகிறது.

இதற்கு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும். மக்கள் தொகை கணக்கு எடுப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது 16 மொழிகளில் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொபைல் ஆப் உருவாக்கப்படும்.

இனி பேனா பேப்பர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களுடைய மொபைல் போனிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும். ஜம்மு காஷ்மீர் மற்றும் பனி மலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் 2021 மார்ச் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களும் பெறப்படும். அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு போன்றது இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு என்றார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories