அதிர்ச்சி: இசையமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை!

Murali chithra - 2026

வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள இசை அமைப்பாளர் முரளி சித்தாரா. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்காவு பகுதியில் உள்ள தோப்புமுக்கு பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவர் உடலை இறக்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு வயது 66. அவருடைய இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. இதுகுறித்து வட்டியூர்காவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட முரளி சித்தாராவுக்கு மனைவி ஷோபனா குமாரி, மிதுன் முரளி மற்றும் விபின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

மறைந்த முரளி சித்தாரா, 1987 ஆம் ஆண்டு ‘தீக்காட்டு’ என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். சிறந்த வயலின் இசைக் கலைஞரான இவர், 90 களில் பல மலையாளப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கே.ஜே.யேசுதாஸின் இசைப்பள்ளியில் கர்நாடக இசை பயின்றவர். அவர் தனது பாடல்களில் அதிகம் கே.ஜே.யேசுதாஸையே பாட வைத்தார்.

அவருடைய அறிமுகப் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கோடி ஸ்வப்பனங்கள்’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டான ஒன்று. 1991 ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் அனைத்திந்திய ரேடியாவில் இணைந்தார். அங்கு மூத்த இசை அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories