December 8, 2025, 4:56 AM
22.9 C
Chennai

உள்ளாடைக்குள் வைத்து 43.88 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!

gold
gold

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 43.88 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்குவதும் தொடர்கதையாகிவிட்டது.

விமான போக்குவரத்து வழியாக அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பிடிபடும் கடத்தல்காரர்கள் தங்கத்தை மறைத்து கொண்டு வர பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.

இதனை எப்படியும் சுங்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகின்றனர். கடந்த மாதம் சென்னையில் பிடிப்பட்ட கடத்தல்காரர்கள் தங்கத்தை தலைமுடியில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் ஜீன்ஸ் பேண்டின் பெல்ட் அணியும் பகுதியில் வைத்து ஒரு கும்பல் தங்கத்தை கடத்தி வந்தது.

இதற்கு ஒருபடி மேலே போய் கேரள மாநிலம் கண்ணூரில் பிடிப்பட்ட ஒரு கும்பல் தங்கத்தை பேஸ்ட் போல் ஜீன்ஸ் பேண்டுகளில் தடவி வந்துள்ளனர். பேண்ட் வித்தியாசமாக இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர்.

Underwear
Underwear

அத்தனை தங்கம் ஒருகணம் சுங்கத்துறை அதிகாரிகளே ஷாக்காகிவிட்டனர். அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14 லட்சமாம்.

மங்களூர் ஏர்போர்ட்டில் கடந்த வாரம் போர்வையில் தங்கத்தை கடத்தி வந்த நபர் பிடிபட்ட நிலையில் தற்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூர் வந்துள்ளார்.

அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

உள்ளாடையில் தனியாக பாக்கெட் ஒன்றை உருவாக்கி அதில் தங்கத்தை பவுடராக்கி எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

சுமார் 920 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவை 24 கேரட் அக்மார்க் தங்கம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மதிப்பு சுமார் 44.88 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories