உள்ளாடைக்குள் வைத்து 43.88 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!

gold
gold

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 43.88 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்குவதும் தொடர்கதையாகிவிட்டது.

விமான போக்குவரத்து வழியாக அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பிடிபடும் கடத்தல்காரர்கள் தங்கத்தை மறைத்து கொண்டு வர பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.

இதனை எப்படியும் சுங்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகின்றனர். கடந்த மாதம் சென்னையில் பிடிப்பட்ட கடத்தல்காரர்கள் தங்கத்தை தலைமுடியில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் ஜீன்ஸ் பேண்டின் பெல்ட் அணியும் பகுதியில் வைத்து ஒரு கும்பல் தங்கத்தை கடத்தி வந்தது.

இதற்கு ஒருபடி மேலே போய் கேரள மாநிலம் கண்ணூரில் பிடிப்பட்ட ஒரு கும்பல் தங்கத்தை பேஸ்ட் போல் ஜீன்ஸ் பேண்டுகளில் தடவி வந்துள்ளனர். பேண்ட் வித்தியாசமாக இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர்.

Underwear
Underwear

அத்தனை தங்கம் ஒருகணம் சுங்கத்துறை அதிகாரிகளே ஷாக்காகிவிட்டனர். அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14 லட்சமாம்.

மங்களூர் ஏர்போர்ட்டில் கடந்த வாரம் போர்வையில் தங்கத்தை கடத்தி வந்த நபர் பிடிபட்ட நிலையில் தற்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூர் வந்துள்ளார்.

அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

உள்ளாடையில் தனியாக பாக்கெட் ஒன்றை உருவாக்கி அதில் தங்கத்தை பவுடராக்கி எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

சுமார் 920 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவை 24 கேரட் அக்மார்க் தங்கம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மதிப்பு சுமார் 44.88 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories