29-03-2023 1:09 PM
More
    Homeஇந்தியாகாவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

    To Read in other Indian Languages…

    காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

    புது தில்லி: காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் தள்ளிவைக்கப் பட்டது.  தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வேறு ஒரு வழக்கின் விசாரணையில் உள்ளார் எனபதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது.

    காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி வரைவு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகுமா என தமிழக விவசாயிகள் எதிர் பார்துள்ளனர்.

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாதென கர்நாடகம் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை கடந்த 3ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    மேலும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, மே 8-ஆம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, கர்நாடகாவில் குறைவான தண்ணீரே இருப்பதாகவும், ஏற்கனவே தமிழகத்துக்கு ஏப்ரல் மாதம் வரை 116 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறியுள்ள அம்மாநில அரசு, தண்ணீரை திறக்க மறுத்தது. இதுகுறித்து மனுவை அம்மாநில அரசு நேற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது.

    இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், இதுவரை 1.4 டிஎம்சி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், மே மாதம் வரை 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...