December 6, 2025, 5:04 PM
29.4 C
Chennai

வாக்குப் பதிவு நாளில்… ஆமா.. ராகுல் ஏன் அமேதியில் இல்லை?! : ஸ்மிருதி இரானி கேள்வி!

smriti irani - 2025

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமேதியில் ராகுல் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக., சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி.

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராகுல், ஓட்டுப்பதிவு தினத்தில்கூட அமேதியில் ஏன் இல்லை என்று கேள்வி எழுபியுள்ளார் ஸ்மிருதி இரானி.

‘அமேதி தொகுதி மக்களுக்கு ராகுல் ஏன் இங்கு இல்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். ராகுல் ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்? அவருக்கு அமேதி தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என்று கூறினார்.

மேலும், ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்காவை விமர்சித்த ஸ்மிருதி இரானி, கடந்த 5 ஆண்டுகளாக என் பெயர் பிரியங்காவுக்குத் தெரியாது. ஆனால், இப்போது பிரியங்கா வத்ரா அவரது கணவரின் பெயரை விட எனது பெயரைத் தான் அதிக முறை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து டுவிட்டர் மூலம் நிர்வாகிகளை எச்சரித்ததுடன், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து விட்டேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

ராகுலின் இத்தகைய அரசியலை தண்டிப்பதா அல்லது வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் டிரஸ்டியாக இருக்கும் மருத்துவமனையில் ஒருவருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை இருந்தும் சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளார்… என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமேதி தொகுதியில் காங்கிரசுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியினர் தங்களை கட்டாயப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோவை டிவிட்டரில் ரீ-டுவீட் செய்து பகிர்ந்துள்ளார் ஸ்மிருதி இரானி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories