தெய்வ சாட்சியாக… வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில்… ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்…!

jagan1 - 2026

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய நான்…. தெய்வ சாட்சியாக…. வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில், இன்று மதியம் 12.23க்கு என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக் கொண்டவுடனே ஜெகன் போட்ட முதல் கையெழுத்து, அவர் முன்பு வாக்குறுதிஅளித்திருந்த படி ஓய்வூதிய திட்டம் குறித்த அந்த பைலில்தான்!

நவரத்தினங்கள் போல், அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்த 9 வாக்குறுதிகளில் முதலாவதாக முதியோர் பென்ஷன் திட்டம் மீதுதான் தனது முதல் கையெழுத்தை இட்டார்!

ஒய்எஸ்ஆர் பென்ஷன் காணிக்கையாக, தாத்தா பாட்டிகளுக்கான காணிக்கையாக, முதலில் கையொப்பமிட்டது முதியோர் ஓய்வூதியத் திட்ட கோப்பில்தான்!

jaganmohan swearingin - 2026அப்போது பேசிய ஜெகன் மோகன், முதியோர் பென்ஷன் ரூ.3000க்கு உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
3648 கிலோ மீட்டர் இந்த பூமி மீது நடந்ததற்கும் ஒன்பது ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக நடந்ததற்கும் வானளாவிய வெற்றியை அள்ளித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அக்காவுக்கும் ஒவ்வொரு தங்கைக்கும் ஒவ்வொரு பாட்டிக்கும் ஒவ்வொரு தாத்தாவுக்கும் ஒவ்வொரு சகோதரனுக்கும் ஒவ்வொரு சினேகிதனுக்கும் இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு உங்களின் ஒவ்வொரு பெயரையும் உச்சரித்து, இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

“ஜெகனுக்கு அளிக்கப் பட்ட பொறுப்பு பெரியது! தந்தையின் வாரிசாக பெயரை காப்பாற்ற வேண்டும்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஜெகனை வாழ்த்தினார். மேலும், இன்னும் மூன்று முறை ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன் என்றார்.

jagan6 - 2026தெலங்கானா முதல்வர் கேசிஆர் மேலும் பேசியபோது, தெலுங்கு மக்கள் இப்போது கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும்! அன்போடு கலந்து இந்த அற்புதமான வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என்றார்! ஆந்திரப் பிரதேசத்தின் இளைய புதிய முதலமைச்சருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று வாழ்த்தினார் கேசிஆர்.

ஜெகன் ஆதரவாளர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானம் நிரம்பி வழிந்தது. பதவிப் பிரமாணம் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் திமுக, தலைவர் ஸ்டாலினும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஜெகன்மோகனின் வீட்டுக்கு மதிய விருந்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் தில்லி செல்ல விமான நிலையம் செல்வதாகக் கூறப்படுகிறது பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன்மோகன் தில்லி செல்வது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories