தெய்வ சாட்சியாக… வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில்… ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்…!

jagan1 - 2026

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய நான்…. தெய்வ சாட்சியாக…. வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில், இன்று மதியம் 12.23க்கு என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக் கொண்டவுடனே ஜெகன் போட்ட முதல் கையெழுத்து, அவர் முன்பு வாக்குறுதிஅளித்திருந்த படி ஓய்வூதிய திட்டம் குறித்த அந்த பைலில்தான்!

நவரத்தினங்கள் போல், அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்த 9 வாக்குறுதிகளில் முதலாவதாக முதியோர் பென்ஷன் திட்டம் மீதுதான் தனது முதல் கையெழுத்தை இட்டார்!

ஒய்எஸ்ஆர் பென்ஷன் காணிக்கையாக, தாத்தா பாட்டிகளுக்கான காணிக்கையாக, முதலில் கையொப்பமிட்டது முதியோர் ஓய்வூதியத் திட்ட கோப்பில்தான்!

jaganmohan swearingin - 2026அப்போது பேசிய ஜெகன் மோகன், முதியோர் பென்ஷன் ரூ.3000க்கு உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
3648 கிலோ மீட்டர் இந்த பூமி மீது நடந்ததற்கும் ஒன்பது ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக நடந்ததற்கும் வானளாவிய வெற்றியை அள்ளித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அக்காவுக்கும் ஒவ்வொரு தங்கைக்கும் ஒவ்வொரு பாட்டிக்கும் ஒவ்வொரு தாத்தாவுக்கும் ஒவ்வொரு சகோதரனுக்கும் ஒவ்வொரு சினேகிதனுக்கும் இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு உங்களின் ஒவ்வொரு பெயரையும் உச்சரித்து, இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

“ஜெகனுக்கு அளிக்கப் பட்ட பொறுப்பு பெரியது! தந்தையின் வாரிசாக பெயரை காப்பாற்ற வேண்டும்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஜெகனை வாழ்த்தினார். மேலும், இன்னும் மூன்று முறை ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன் என்றார்.

jagan6 - 2026தெலங்கானா முதல்வர் கேசிஆர் மேலும் பேசியபோது, தெலுங்கு மக்கள் இப்போது கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும்! அன்போடு கலந்து இந்த அற்புதமான வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என்றார்! ஆந்திரப் பிரதேசத்தின் இளைய புதிய முதலமைச்சருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று வாழ்த்தினார் கேசிஆர்.

ஜெகன் ஆதரவாளர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானம் நிரம்பி வழிந்தது. பதவிப் பிரமாணம் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் திமுக, தலைவர் ஸ்டாலினும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஜெகன்மோகனின் வீட்டுக்கு மதிய விருந்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் தில்லி செல்ல விமான நிலையம் செல்வதாகக் கூறப்படுகிறது பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன்மோகன் தில்லி செல்வது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories