சிறுவனின் உயிரை பறித்த செல்போன் விளையாட்டு …..!

dead bady - 2026

மத்திய பிரதேசத்தில், தொடர்ந்து ஆறு மணி நேரம், ‘பப்ஜி’ எனப்படும், ‘மொபைல் போன்’ விளையாட்டை விளையாடிய, 16 வயது சிறுவன், மாரடைப்பால் இறந்தார்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஹாரூன் ரஷீத் குரேஷி. இவரது மகன் புர்கான் குரேஷி; பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறான்.

.மத்திய பிரதேசத்தில் உள்ள நீமச் என்ற இடத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, ஹாரூன் குரேஷி குடும்பத்துடன் சென்றார்.

அவரது மகன் புர்கானுக்கு, மொபைல் போன் விளையாட்டு மீது அதிக ஆர்வம். அதிலும், ‘பப்ஜி’ என்ற போரில் சண்டையிடும் விளையாட்டை, வெறி கொண்டு விளையாடி வந்துள்ளார்.

சாப்பிடுவது, துாங்கும் நேரம் போக, மற்ற நேரமெல்லாம், போனில் விளையாடுவதிலேயே கழிந்து வந்துள்ளான்.

இந்நிலையில், திருமணத்திற்கு தன் பெற்றோருடன் சென்ற புர்கான்,அங்கும், ‘பப்ஜி’ விளையாட்டில் மூழ்கியுள்ளான்.

மாலையில் துவங்கி, நள்ளிரவு வரை, தொடர்ந்து போனில் விளையாடி உள்ளான்.

பின், சில மணி நேரங்கள் மட்டும் துாங்கியவன். காலையில் எழுந்தவுடன், தொடர்ந்து விடாமல் ஆறு மணி நேரமாக, ‘பப்ஜி’ விளையாடி உள்ளான். அப்போது திடீரென மயங்கி விழுந்தவனை பெற்றோர் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

சிறுவன் புர்கானை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து,புர்கானின் தந்தை ஹாரூன் கூறியதாவது: ‘பப்ஜி’ விளையாட்டில் தோற்று விட்டார். அதையடுத்து, ‘விடாதே அடி…’ என கத்தியவர், அப்படியே மயங்கி, பேச்சு மூச்சின்றி சரிந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, இதய சிகிச்சை நிபுணர்,டாக்டர் விபுல் கர்க் கூறியதாவது:மொபைல் போனில் வரும் போரிடுவது போன்ற விளையாட்டுகளில், சிறுவர்கள் மனதளவில் ஒன்றி விளையாடுகின்றனர். ஒருகட்டத்தில், பரபரப்பும், உற்சாகமும் அளவுக்கு அதிகமாவதால், அதிர்ச்சியில் இதயம் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள் இது போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.’பப்ஜி’ விளையாட்டு, சிறுவர்கள் மத்தியில் வன்முறையை துாண்டுவதாகவும், அவர்களுடைய குணம் மற்றும் படிப்பை பாதிப்பதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, பல மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 16 வயது சிறுவன் மாரடைப்பால் பலியாகும் அளவுக்கு, விளையாட்டு வினையாகி இருப்பது, பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories