December 6, 2025, 7:52 PM
26.8 C
Chennai

வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறும் அமித் ஷா!

amit shah - 2025

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக., தேசியத் தலைவருமான அமித் ஷா விரைவில் குடியேற உள்ளார்.

தில்லியில் அமைச்சர்கள், விவிஐபி.,க்கள் வசிக்கும் மத்திய தில்லி பகுதியில் உள்ள கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் வாஜ்பாய் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

பிரதமராக இருந்த போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வந்த அவர், பின்னர் 2004ல் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதும் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவுக்கு மாறினார். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் காலமாகும் வரை அந்த இல்லத்தில்தான் வசித்துவந்தார்.

வாஜ்பாய் காலமானதை அடுத்து, நவம்பரில் அவரின் குடும்பத்தினர் அந்த பங்களாவை காலி செய்தனர். தற்போது யாரும் அங்கே குடியிருக்கவில்லை..

மோடி கடந்த முறை பிரதமரானபோதே, ‘தில்லியில் தலைவர்கள் வசித்த இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்படாது’ என உத்தரவிட்டிருந்தார். அதன்படி வாஜ்பாய் வசித்த பங்களாவும் நினைவிடமாக மாற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, தில்லியில் தலைவர்களுக்கான நினைவிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாஜ்பாய்க்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஜ்பாய் வசித்த பங்களாவை தூய்மைப் படுத்தி அதனை அமித் ஷாவுக்கு ஒதுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அண்மையில் அங்கே சென்ற அமித் ஷா, சில மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டார். விரைவில் அந்த பங்களாவில் அவர் குடியேற உள்ளார். தற்போது அவர் தில்லியில் அக்பர் ரோடு 11 ஆம் எண் பங்களாவில் வசிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories