spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தோப்பில் மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்! நேர்ந்த விபரீதம்!

தோப்பில் மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்! நேர்ந்த விபரீதம்!

- Advertisement -
madhan
madhan

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் கங்கையம்மன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 11 வயதில் மதன் என்ற மகன் இருந்துள்ளார்.

மதன், அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்தநிலையில் மதன் நேற்று தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

அப்போது மாந்தோப்பின் அருகில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி, மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயன்றுள்ளான் சிறுவன் மதன். அப்போது அருகில் இருந்த மின்மாற்றியில் எதிர்பாராதவிதமாக சிறுவனின் கைபட்டு அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான் சிறுவன் மதன். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக மதனின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe