தொ‌ற்று பரவும் அபாயம்.. மழையில் நனைந்தபடி சடலத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு!

asaripallam
asaripallam

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மழையில் நனைந்தபடியே பிணவறை முன்பு காத்திருக்கும் அவலம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியமான இச்செயல்பாடுகளால் கொரோனா எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், மருத்துவ கல்லூரி பிணவறையில் சடலங்கள் குவிந்து வருகின்றன.

ஒவ்வொரு நோயாளியும் உயிரிழந்தால் அவர்களது சடலங்களை கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரத்தியேகமாக உறையில் பார்சல் செய்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சடலங்களை ஸ்ட்ரக்சர்களில் வார்டுகளிலிருந்து எடுத்து வந்து பிணவறையில் வைத்து பிரத்யேக பார்சல் செய்வதற்காக போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் சடலங்களை பெறுவதற்காக உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாபகரமான நிலை உள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

இதற்கிடையே குருசடி பகுதியை சேர்ந்தசெல்வராஜ் என்பவரது சடலம் மாயமான சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரபபை ஏற்படுத்தியது.

வார்டுகளிலிருந்து அப்புறப்படுத்தும் சடலங்கள் மழையில் நனைந்தபடியே ஸ்ட்ரக்சரில் கொண்டுவரப்பட்டு பிணவறைக்கு முன்பு மழையிலேயே காத்திருக்கும் அவலம், பரிதாப நிலையும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மூலம் மற்றவர்களுக்கு அது பரவும் அளவுக்கு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மழையில் நனைந்தபடி பிணவறை முன்பு வைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒளிப்பதிவு செய்ய சென்ற செய்தியாளர்களை அங்குள்ள ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

மருத்துவ கல்லூரி நிர்வாகமும் மருத்துவமனை ஊழியர்களும் அஜாக்கிரதையாக செயல்படுவதை சரி செய்வதற்கு பதிலாக அவற்றை அம்பலப்படுத்தப் முயற்சிக்கும் செய்தியாளர்கள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலையில் சடங்கு சடலங்களை கைப்பற்ற வரும் உறவினர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories