scooter - 2026

காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி வாகன ஓட்டி ஒருவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்ட நிலையில் அதனை மிஞ்சும் வகையில் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர் ஆபத்தை உணராமல் தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியுள்ளார்.

இதனை சக வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று ஆபத்தை உணராமல் பயணம் மேற்கொள்வது அவருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பேராபத்தை தரும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending